அகிலத்திரட்டு அம்மானை 991 - 1020 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 991 - 1020 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

கொன்னு கிரேதா குவலயமும் நானழித்து
முன்னு கரந்திருந்த ஆறு முகவேசம்
செந்தூரு வாரி திரைமடக்கில் வாழ்ந்திரென்று
வந்தோங் காணய்யா மலர்ப்பாதந் தெண்டனிட
என்றேதா னாதி ஈசுரரோ டேதுரைப்பார்
அன்றேதா னீசர் அருளுவா ராயருக்கு

திரேதா யுகம் - இராவணன் பாடு

முன்னே குறோணி முடிந்ததுண் டாறதிலே
இன்னமூணு துண்டம் இருக்குதுகாண் மாயவரே
என்றீசர் சொல்ல எல்லோருந் தான்கூடி
அன்றிருந்த துண்டம் அதிலேயொரு துண்டமதை
உருவாய்ப் படைத்து உயிர்க்கொடுக்கு மவ்வளவில்
அருகே யிருந்த அச்சுதரு மேதுரைப்பார்
முன்னே இவனும் முற்பிறப் பானதிலே
என்னோடே பேசி எதிர்த்தான் காணீசுரரே
ஆனதா லிப்பிறப்பு அரக்க னிவன்றனக்கு
ஈனமில்லாச் சிரசு ஈரஞ் சாய்ப்படையும்
பத்துச் சிரசும் பத்துரண்டு கண்காதும்
தத்துவங் களோடே தான்படையு மென்றுரைத்தார்
மாய னுரைக்க மறையோ னகமகிழ்ந்து
வாய்சிரசு பத்தாய் வகுத்தார்கா ணம்மானை
கூடப் பிறக்கக் குண்டிலிட்ட ரத்தமதை
வாட அரக்கர் குலமாய்ப் பிறவிசெய்தார்
அப்போ படைக்கும் அவ்வளவில் மாயவனார்
மெய்ப்பான மேனிதனில் வியர்வை தனையுருட்டி
விபீஷண னென்று மெய்யுருவந் தானாக்கிக்
கவுசலமா யரக்கன் தம்பியெனக் கருத்தாய்க்
கூடி யிருந்து அரக்கன் குறியறிந்து
வேடிக்கை யாக வீற்றிரென்று தானுரைத்தார்

இராவணன் வரம் வேண்டல்


பத்துத் தலையான பாவி அரக்கனவன்
மற்று நிகரொவ்வா வாய்த்தபர மேசுரரை

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi