அகிலத்திரட்டு அம்மானை 4021 - 4050 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 4021 - 4050 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சந்துபயில் மாமுனியே தண்ணீரைக் காணாமல்
பெண்ணாக வந்த புதுமையென்ன மாமுனியே
கண்ணான மாமுனியும் கட்டுரைப்பா னம்மானை
எண்ணாத தெண்ணி ஏதுரைப்பான் மாமுனியும்
பெண்ணோடு கேட்டால் புதுமை யதுதெரியும்
என்றுரைக்க மாமுனியும் ஏந்திழையோ டேதுரைப்பான்
நன்றுநன்று பெண்ணேநீ நதியா யிருந்ததுவும்
பெண்ணாக வந்ததுவும் பேசுநீ ஒண்ணுதலே
தண்ணீராய் நின்ற தார்குழலா ளேதுரைப்பாள்
அய்யாவே நானும் அதிகயி லாசமதில்
மெய்யாக ஈசுரர்க்கு வேலையது செய்திருந்து
வருகின்ற வேளையிலே மனங்குழறி நானடியாள்
அரையில் கலைபூணா(து) ஆவியிலே சென்றிறங்கிக்
குளித்தே னதையும் கொன்றையணி வோனறிந்து
அழித்தே யெனையும் ஆவிபோலே படைத்தார்
படைக்கும் பொழுதில் பரமனோ டிச்சாபம்
கடருவதெப் போதெனவே கறைக்கண்ட ரோடுரைத்தேன்
ஆவியாய் நீகிடந்தால் அச்சுதனா ரங்குவந்து
தாவிக் குளிக்க சாபமது மாறுமென்றார்
என்றுரைக்கப் பெண்ணாள் எம்பெருமா ளேதுரைப்பார்
அன்றந்தப் பெண்ணதையும் ஆகமப் போகனையும்
நானாண் டிருந்த நல்லதுவா பரத்தில்
தானாக ஆண்டு தானிருக்கு மப்பொழுதில்
சூரிய வொளிகாந்தம் துலங்கும்வை டூரியத்தில்
வீரிய மான வெற்றிவிரு துக்குடையும்
தங்கப்பொன் னாயுதமும் தளிருநிறச் சக்கரமும்
பங்கமில்லா முத்துப் பவள நிறக்குடையும்
கட்டான வைரக் கற்கோட்டை வாவிகளும்
மட்டான செம்பவள வைரக்கால் மண்டபமும்
உண்டுகா ணத்தனையும் உடனேபோய் நீங்களுந்தான்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi