அகிலத்திரட்டு அம்மானை 3961 - 3990 of 16200 அடிகள்
மலைதனிலே முட்டி மாளவென்று மாமுனிநீ
குலைகுலைந்து நின்றவிதம் கூறுநீ யென்றனராம்
அப்போது மாயவனார் அடிபோற்றி யேதுரைப்பான்
செப்பமுள்ள மாயவரே சீமைதனை யளந்த
மாயவரேநானுமினி மாள்வதல்லா லிங்கிருக்க
ஞாயமில்லை அய்யா நாரா யணப்பொருளே
என்றுரைக்க மாமுனியும் ஏதுரைப்பா ரெம்பெருமாள்
உன்று வசனம் உரையென்றார் மாமுனியை
என்றெம் பெருமாள் இவையுரைக்க மாமுனியும்
அன்று முனிசொன்ன வசனங்கே ளன்போரே
தர்மநீ தமதுவும் தரணிதனில் மானுபமும்
கர்மக் கலியால் கட்டழிந்து போச்சுதையா
நன்மையெல்லாம் நாடுவிட்டு நடந்து மறைந்ததினால்
வன்மம்வந்து வையகத்தில் வளர்ந்த படியாலும்
நானிருந்த நிட்டை நாலிரண் டாகையிலே
மானிபங்கள் தர்மம் மறையத்தான் போனதினால்
என்தவந்தான் வம்பில் இழந்தேனே யென்றுசொல்லித்
தன்தலையைத் தான்சிதறிச் சாகவே ணுமெனவே
மலைதனிலே முட்டி மாண்டுவிட வேணுமென்று
அலைமேல் துயின்ற ஆண்டியோ டேயுரைத்தான்
நல்லதென்று யுன்றனக்கு மாளவென்றால் வேறில்லையோ
கல்லிலே முட்டிக் கண்தவர்ந்து சாவதென்ன
சொல்லுநீ யென்று திருமா லிதுவுரைக்க
மலைப் புதுமை
அப்போது மாமுனியும் அந்தமலைப் புதுமை
இப்போது சொல்லுகிறேன் என்றே வுரைக்கலுற்றான்
வேதா விதித்த மேலான ஆகமம்போல்
நாதாந்த வேதம் நாலுண்டு கண்டீரே
கலியன் பிறந்தபின்பு கட்டான வேதமொன்று
சலிவாகி வேதம் தான்விளங்கா வண்ணமுந்தான்
இளகாமல் கற்போல் இருந்ததுகாண் வேதமது
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 3961 - 3990 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi