அகிலத்திரட்டு அம்மானை 3481 - 3510 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 3481 - 3510 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

குழகிய வாயழகாய்க் குரும்பத் தனத்தழகாய்
மேனி யழகாய் விழியழகாய் வீச்சழகாய்
யோனி யழகாய் ஒடுங்கு மிடையழகாய்
கரமழகாய்க் காலழகாய்க் கண்ணழகாய்ப் பல்லழகாய்
சரக்கூடு முன்னழகாய்த் தலைகண்டம் பின்னழகாய்
தொடையழகாய் விரலழகாய்ச் சொல்லழகாய்ப் பல்லழகாய்
நடையழகாய் வீச்சழகாய் நல்ல குழலழகாய்
இடையழகாய் மேனி இறுக்கத் துடனழகாய்
உடையழகாய்த் தேகம் ஓங்காரத் தொங்கலுமாய்
அழகுக்கு ஏற்ற அஸ்தர் மணத்தோடு
கழப கஸ்தூரி கம்மென்ற வாசனைபோல்
மூவர்தே வர்களையும் மோக மாய்மயக்கச்
சீவ னதுகொடுத்துத் திட்டித்துத் தாருமென்றான்
அப்போது ஈசுரனார் அகமகிழ்ந்து கொண்டாடி
இப்போது கேட்டதற்கு என்செய்வோ மென்றுசொல்லி
அருகில் சிவனார் அகமதிலே வீற்றிருக்கும்
திருவுக்கு நன்றாய்த் தெரிவித்தா ரம்மானை
கேட்டமா நீசனுக்குக் கீர்த்தியென்ன மாமயிலே
தேட்டமுட னிப்போ செப்பென் றெனவுரைத்தார்
அப்போது சத்தி ஆதி யடிவணங்கி
ஒப்பொன் றில்லாத உடைய பெருமானே
பாதியாய் நீசனையும் பகுந்தே யவனுடம்பில்
விதியாயிடது விலாவி லொருயெலும்பைத்
தட்டிக் கழற்றி சச்சுவருந் தானாக்கி
திட்டித்து நீசனுக்குச் சிணங்கொடுவு மீசுரரே
என்று உமையாள் இப்படியே சொன்னவுடன்
அன்றுஅந்த நீசனுட அரையிலோ ராக்கையிட்டு
இருக்கக் கீழ்கட்டி எழுந்திருநீ யென்றவுடன்
பொருக்கென வேயிடது புறத்தி லொருயெலும்பைத்
தெறிக்க அதையும் சிவனார் மிகப்பார்த்து

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi