அகிலத்திரட்டு அம்மானை 3451 - 3480 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 3451 - 3480 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

என்றனிடங் கேளென்று ஈசுரனார் தானுரைக்க
உடனே யவனும் உள்ள மிகக்களித்து
விடமேதான் பூண்டு விரிகந்தைத் தானுடுத்து
மேலெல்லாங் குப்பை மிகப்பூசி யானையுடத்
தோலி லிருப்பவனோ சொன்னதெல்லாந் தாறதுதான்
என்று களிப்பாய் ஈசுரரை யந்நீசன்
அன்று மொழிய அமர ரதையறிந்து
பொல்லாத நீசா பொருளறிய மாட்டாமல்
எல்லாரைப் போலே ஏசாதே ஈசுரரை
லோகம் படைத்தவர்காண் உறுபொருளாய் நிற்பவர்காண்
ஏகம் நிறைந்தவர்காண் இறவா திருப்பவர்காண்
பட்சிப் பறவை பலசீவ செந்துகட்கும்
நிச்சயமாய்ப் பொசிப்பு நிதமு மளிப்பவர்காண்
மாயவனும் நான்முகனும் மறையு மிகக்காணாமல்
தேயவா றுங்காணாத் திட்டிக்க வல்லவர்காண்
இத்தனையும் நீசனுக்கு இயம்ப அமரர்களும்
புத்திக்கு நட்புப் போதாமல் பின்சொல்லுவான்

கலிச்சி தோற்றம்

ஆனால்தான் தேவர்களே அப்படிநீ ரொப்பினீரே
தானா யிருந்து சர்வமதுமுண் டாக்கிவைத்த
ஆனா லெனதுடைய அளவி லளவாக
மானா ரொருகுழலை வகுக்கச்சொல் பார்ப்போங்காண்
என்றந்த நீசன் இழிவாகச் சொல்லிடவே
அன்றந்த ஈசர் அவரறிந்து ஏதுரைப்பார்
நல்லதுநீ கேட்டதுதான் நாம்படைத்துத் தாறோமென்று
வல்லபர மேசுரனார் வகையே தெனப்பார்த்து
உந்தனக்கு நேரே ஒத்த பலம்போலே
அந்தமுடன் பிறந்தால் ஆகுமோ வென்றுரைத்தார்
அப்போது நீசன் அரனார் தனைநோக்கி
ஒப்பமாகா தென்பலத்தில் ஒன்றி லரைப்பலமாய்
அழகி லதிகமுமாய் ஆங்காரம் பாதியுமாய்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi