அகிலத்திரட்டு அம்மானை 3181 - 3210 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 3181 - 3210 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வைந்தர்பல தேவர்களை வாருமென வேயழைத்துப்
பாலருட முகூர்த்தம் பார்க்கப்போ மென்றுசொல்லி
சீலமுட னனுப்பி ஸ்ரீரங்க மேயிருந்தார்
தேவதே வர்புகழத் திசைவென்ற சான்றோர்க்கு
மூவர்களும் வந்து உதவிசெய்தா ரம்மானை
நல்ல முகூர்த்தம் நாள்பார்த்துச் சான்றோர்கள்
எல்லாச் சடங்கும் இயற்றிவைத்தா ரம்மானை
சடங்கு முகித்துச் சான்றோரை யொப்பமிட்டுத்
தடங்கொண்ட மன்னவரைத் தண்டிகையின் மீதிருத்தி
அரசர் மிகச்சூழ அணியீட்டி யாட்கள்வர
விரைவாகக் காளி வித்தகலை யேறிவர
அரம்பையர்க ளாடிவர அயிராவதத் தோன்வரவே
வரம்பெரிய தேவர் மலர்மாரி தூவிவர
ஆலத்தி யேந்தி அணியணியாய்த் தான்வரவே
மூலத்தி கன்னி மோகினியாள் தன்னுடனே
பூதம தாடி பிடாரியது சூழ்ந்துவர
நாதம் ரெட்டையூதி நடந்தார்மாப் பிள்ளைகொண்டு
விருதிற் பெரிய வீரதெய்வச் சான்றோர்கள்
நிருபன் மகளை நியமித்து மாலையிட
வீரியமாய் நல்ல விவாகமிட வாறாரெனப்
பூரியலிற் சொல்லி பேர்கள் சிலரூத
இப்படியே வாத்தியங்கள் இசைந்திசைந் தேவூதி
அப்படியே நிருபன் அரசன் மகள்தனையும்
மாலை மணமிட்டு வாழவந்தா ரம்மானை
வாலையது வான மாகாளி வாழுகின்ற
மண்டபத்துள் வந்து மகிழ்ந்திருந்தா ரம்மானை
தண்டமிழுங் கன்னி சான்றோர்க ளானோர்க்குக்
கோட்டையு மிட்டுக் குமாரரையும் பெண்ணதையும்
தாட்டிமையாய்ச் சான்றோர்க்குத் தரந்தரமே மாளிகையும்
வைத்துக் கொடுத்தாள் வாழ்ந்திருந்தார் சான்றோர்கள்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi