அகிலத்திரட்டு அம்மானை 2791 - 2820 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 2791 - 2820 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

கற்போடு வொத்த கன்னியே வுன்றனக்கு
பெண்ணா ணுமில்லாப் பெரிய பெலக்காரி
கண்ணான காளி காரிகையே நீகேளு
தரித்துப் பிறக்கத் தகாதே மாகாளி
மரித்துப் பிறக்காத மாகாளி யேயுனக்கு
விடையா யொருவசனம் விரிக்கக்கே ளொண்ணுதலே
படைக்காகப் பாலர் பச்சைமால் தாவெனவே
தவசு மிகப்புரிந்தால் சங்குசரத் தாமன்
விபுசு தனிற்பிறந்த வீரரேழு பேர்களையும்
உன்னை யழைத்து உன்கையி லேதருவார்
முன்னே தவசு மிகப்புரியப் போவெனவே
அரனார் விடையும் அருளி மிகக்கொடுக்கப்
பரமான தேவி பச்சைமால் தன்றனைத்தான்
நினைத்துத் தவசு நெடுநாளாய் நின்றிடவே
அனைத்துயி ருங்காக்கும் அச்சுதருந் தானறிந்து
மக்களேழு பேர்களையும் மாகாளி கைக்கொடுக்கக்
கொக்கரித்துக் காளி கொண்டாடித் தான்மகிழ்ந்து
வாங்கு மளவில் மாமுனியைத் தானோக்கி
தாங்கிநின்று பாதத்(து) அடிதாழ்ந்து ஏதுசொல்வாள்
வேத முனியே வித்தைக் கருத்தோனே
மாதவங்கள் கற்ற மாமுனியே யிம்மதலை
ஆனோர்க்கு நாமம் அருளிநீர் தாருமென்றாள்
வானோர்கள் போற்றும் மாமுனியுந் தான்மகிழ்ந்து

சான்றோர்க்கு நாமம் அருளல்

உள்ளதுதா னென்று உடனே மனமகிழ்ந்து
வள்ளல்சிவ னாரறிந்து மறைவேதனை யழைத்து
முப்பத்து முக்கோடி முனிவரவர் தங்களையும்
நாற்பத்து நாற்கோடி நல்ல ரிஷிகளையும்
தேவர் முதலாய்த் தேவேந் திரன்வரையும்
மூவ ரறுவர் உள்ளோரையு மழைத்து
கிணநாதர் வேதா கிம்புருடரை யும்வருத்தி

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi