அகிலத்திரட்டு அம்மானை 2761 - 2790 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 2761 - 2790 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

செல்லமக வான சிறுவர் தமைவளர்க்க

காளி வரவு

மாகாளி யென்ற வடபத்தி ரகாளி
ஓகாளி யென்ற உயர்ந்த பெலக்காரி
பெண்ணல்லப் போர்க்குப் புருடர்மிகப் போராது
விண்ணவரும் மண்ணவரும் விறுமாவும் போராது
அப்படியே துஷ்ட ஆங்கார மாகாளி
இப்படியே நன்றாய் இவளிருக்கும் நாளையிலே
ஆணொருவர் தன்னால் அழியா வரங்கள்பெற்ற
தாணொருவன் தனையும் சத்தி உமைதனையும்
கெணியா வரங்கள்பெற்றுக் கீழுமே லுமடக்கித்
துணிவாகத் தேவர்களைத் தூளிபட ஏவல்கொண்டு
தேட்ட முடனேழு செகல்கடந் தப்புறத்தில்
கோட்டை யதிட்டுக் குறும்புசெய் தாண்டனனே
தேவர்கள் சென்று சிவனார்க் கபயமிட
மூவரு மொத்திருந்து மழுதும் விசாரமிட்டார்
ஆணாலே தக்கனையும் அழிக்கவகை யில்லையிங்கே
பூணாரம் பூண்ட புட்டா புரக்காளி
காளி படையும் கமண்டலத்தில் சென்றதுண்டால்
தூளிபடத் தக்கன் சிரசறுப்பா ளென்றுமிக
மாலுரைக்க ஈசுரரும் மறையோருஞ் சம்மதித்து
வேலுகந்த காளிதனை விளித்தார்கா ணம்மானை
உடனறிந்து மாகாளி உடையோன் பதம்பணிந்து
வடவாக் கினிமுகத்தாள் வருத்தினதே னென்னையென்றாள்
தக்கன் தலையறுத்துச் சங்காரஞ் செய்திடவே
மிக்கநீ போவெனவே விடைகொடுத்தா ரீசுரரும்
விடைவேண்டி காளி விமல னடிபோற்றிப்
படைக்காரி பின்னுமொன்று பரமனோ டேகேட்டாள்
என்னோ டுதவி இயல்படையாய்த் தான்வரவே
வன்னப் புதல்வர் வகிருமென்றாள் மாகாளி
அப்போது ஈசுரரும் ஆங்காரியை நோக்கி

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi