அகிலத்திரட்டு அம்மானை 1741 - 1770 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 1741 - 1770 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

திறவி முதலே திரவியமே சிவமே உமது செயலைவிட்டு
இறவி யானா லெங்களுக்கு இனிமேல் பிறவி வேண்டாமே

விருத்தம்

வேண்டா மெனவே மெல்லியர்கள் விமல னடியை மிகப்போற்றி
மாண்டா ரெலும்பை மார்பணியும் மறையோன் பின்னு மகிழ்ந்துரைப்பார்
தூண்டாச் சுடரோன் திருமாலைச் சேயென் றெடுத்தச் செய்கையினால்
ஆண்டா ருமக்கு மகனாகி அதின்மேல் பதவி உங்களுக்கே

நடை

மெல்லியரே உங்களுட மெய்வரம்பு தப்பினதால்
செல்ல ஏதுவாச்சு சீமையிலே யம்மானை
என்றே அரனார் இருகன்னி யோடுரைக்க
அன்றே மடவார் ஆதிதனை நோக்கி
ஆதியே நாதி ஆனந்த மெய்ப்பொருளே
சோதியே நாதி சொரூபத் திருவிளக்கே
அல்லாய்ப் பகலாய் ஆரிருளாய் நிற்போனே
வல்லாய்ப் புவியை வார்த்தையொன் றாற்படைத்த
ஆதிப் பொருளே அனாதித் திருவுளமே
சோதிப் பொருளே சொல்லொணா தோவியமே
எட்டாப் பொருளே எளியோர்க் கெளியோனே
முட்டாத செல்வ முதலே முழுமணியே
கண்ணுள் மணியே கருத்தினுள் ளானவனே
பெண்ணு மாணாகிப் பிறப்பில்லா நின்றோனே
இறப்புப் பிறப்பில்லாத எளியோர்க் கெளியோனே
பிறப்பு இறப்பில்லாத பேசமுடி யாதவனே
கருவிதொண்ணூற் றாறும் காவலைந்து பேருடனே
உருவு பிடித்து உயிர்ப்பிறவி செய்வோனே
மூவரு முன்றன் முடிகாண மாட்டாமல்
தேவருந் தேடித் திரிந்தலைய வைத்தோனே
மவ்வவ் வாகி வருந்தியவ்வும் ஒவ்வாகி
செவ்வவ் வாய்நின்ற சிவனே சிவமணியே
மாய னெடுத்த மகவான கோலமதை
நேய மறியாமல் நெறிதவறிப் போனதினால்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi