அகிலத்திரட்டு அம்மானை 1681 - 1710 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 1681 - 1710 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

வருணனொடு வாயுவையும் வலுவிலங்கில் தான்போட்டு
அருணன் முதலாய் அந்தி வரும்வரையும்
வேலை யவன்கொண்டு விடுவா னவன்தொழிலாய்
மாலை நினையான் மறையைமிக நினையான்
ஆலயங்கள் கோயில் அழிந்த மடங்கள்வையான்
சாலயங்கள் செய்யான் தர்மசிந்த னைகள்செய்யான்
அந்தணர்க்கு மீயான் அன்னதா னங்களிடான்
பந்தலிட்டுத் தண்ணீர் பக்தர்தமக் களியான்
ஆவு தனையடைத்து அதுக்கிரைகள் போடாமல்
கோவுகளைக் கொல்வான் கொடும்பாவி நெட்டூரன்
கண்ட வழக்குரையான் கைக்கூலி கேட்டடிப்பான்
சண்டனைக்கண் டாருவென்பான் தன்னைப்பா வித்திருப்பான்
எம்மைப் படைக்க ஏலுமோ மற்றொருவர்
நம்மைப் படைத்ததுவும் நான்தா னெனவுரைப்பான்
இப்படியே கஞ்சன் எதிரியில்லை யென்றுசொல்லி
அப்படியே மீறி ஆண்டான்கா ணம்புவியை
மேலோகந் தன்னில் மிகுத்ததெய்வக் கன்னியரில்
வாலோக மான வாய்த்தகன்னி தேவகியும்
உரோகணியா ளென்னும் நுதல்மடவா ரண்டுபேரும்
புரோகணிய மான பொய்கைநீர் தானாடி
அக்காளுந் தங்கையுமாய் அவர்கள்ரண்டு மாமயிலும்
மிக்கான பட்டுடுத்து மேவிவழி தான்வரவே
மாயன் சிறுமதலை வடிவெடுத்துத் தானழவே
ஆயனுட கோலம் அறியாமல் மங்கையர்கள்
தெய்வகியும் பார்த்துச் சொல்லுவாள் தங்கையிடம்
நெய்நிதியக் கன்னி நெடியவிழி ரோகணியே
இன்னா அழுது இதில்கிடக்கும் ஆண்மதலை
பொன்னான பூமியிலும் பெண்ணே நான்கண்டதில்லை
காலில்சிவ சக்கரமும் கையில்மால் சக்கரமும்
மேலில்சத்தி சக்கரமும் விழிசரசு சக்கரமும்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi