அகிலத்திரட்டு அம்மானை 1411 - 1440 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 1411 - 1440 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

வாளை அயச்சார் வாய்த்தபர மேசுரரும்
தாழ வரும்போது தாமனந்த லட்சுமணர்
கண்டந்த வாளைக் கைநீட்டித் தான்பிடித்துத்
துண்டம் விழஆலைத் துஞ்சிவிழ வெட்டினர்காண்
பட்டந்த ஆலும் படபடெனச் சாய்ந்திடவே
வெட்டந்து வீழ்ந்தான் மீண்டுதிரம் பாய்ந்ததுவே
அரக்கன்தாய் கண்டு அலறி வெகுண்டெழுந்து
இரக்கமில்லாச் சூர்ப்பநகை இலட்சுமண ரைத்தேடி
தேடி ஸ்ரீராமர் சீர்பாதங் கண்டணுகி
நாடியெனைத் தாவுமென்று நாணமில்லா தேயுரைத்தாள்
என்பாரி யிங்கே இருக்கவே வேறொருவர்
தன்பாரி தன்னைத் தான்விரும்பேன் போடியென்றார்
போடிநீ யென்ற புத்திதனைக் கேட்டரக்கி
தேடியே லட்சுமணரைச் சேரவுற வாடிநின்றாள்
உறவாடி நின்ற ஒயிலை யவரறிந்து
பறபோடி யென்று பம்பத்தன மூக்கரிந்தார்
மூக்கு முலையும் முகமும் வடிவிழந்து
நாக்குரைக்க வாடி நாணங்கெட்டத் தீயரக்கி
தன்னுடனே கூடித் தமய னெனப்பிறந்த
மன்னன்ரா வணன்தமக்கு வகையா யுரைக்கலுற்றாள்
காட்டி லொருபெண் கமலத் திருமகள்போல்
நாட்டிலொவ்வாக் கன்னி நான்கண்ட தில்லையண்ணே
உன்றனக்கு ஆகுமென்று உற்றவளை நான்பிடித்தேன்
என்றனுட மூக்கரிந்தோர் இருவருண் டல்லாது
மற்றொருவ ரங்கே வாழ்ந்திருக்கக் கண்டதில்லை
கற்றொ ருவர் காணாது கையிலம்பு காணாது
மருவனைய அண்ணேவுன் வாய்த்த விரலதிலே
ஒருயிறைக்கே வுண்டு உற்றஅவர் தன்னுயரம்
என்றந்த அரக்கி ஈனம்பல துரைக்க
அன்றந்த ராவணனும் ஆகாசத் தேரேறிப்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi