அகிலத்திரட்டு அம்மானை 3841 - 3870 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 3841 - 3870 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

எங்களுக் கங்கே இருந்தா லாகாதெனவே
செங்கண்மா லாயனையும் தேடியே போறோமென்றார்
அப்போது பாண்டவர்கள் அன்பாய்ப் பதம்பணிந்து
இப்போது உங்களையும் இழந்துவிட் டிங்கிருந்தால்
கர்மக் கலிமூழ்கிக் காண்பதில்லை குண்டமது
தர்மத் தோடங்கே தான்வருவோம் கண்டீரே
தர்மமும் நீதமதும் தாட்டீகப் பாண்டவரும்
வர்மமில்லாக் குண்டம் வழிநோக்கிச் செல்லுகையில்
மேலான மாமிருகம் வேதக் காராவுகளும்
நாலா மொருதலையும் நல்ல அரவமதும்
வெண்பட்சி யான மேலான பட்சிகளும்
இன்பட்சி யெல்லாம் எங்கினிப் போவோமென்று
கதறி யழுது கனைத்துநின்றார் காடதிலே
பதறி யழுது பறவை மிருகமொடு
நிற்கு மளவில் நீலவண்ணர் தானறிந்து
பக்குவப் பிராயப் பண்டார மாகிவந்து
ஏதுகா ணீங்கள் இந்தவன வாசமதில்
ஓதிக் கரைய உங்கள்விதி யானதென்ன
செப்போடு ஒத்த திருமால் தனைப்பார்த்து
அப்போது எல்லாம் அழுதழு தேதுசொல்லும்
நீசக் கலியன் நீணிலத்தில் வந்ததினால்
தேசமதி லெங்களுக்குச் செல்லவிருப் பில்லையையா
என்றுரைக்கச் சன்னாசி ஏதுரைப்பா ரன்போரே
நன்றுநன்று கேளும் நான்சொல்ல நீங்களுந்தான்
பாண்டவரைத் தர்மமதைப் பாரநீ தமதையும்
ஆண்ட வைகுண்டம் அடையப்போ மென்றுரைத்தார்
தெய்வக் காராவைச் சிறந்தவெள் ளானைகளை
மெய்வரம்பு கொண்ட மிகுத்த மிருகமெல்லாம்
கும்பக் குருமலையில் கூடியே நீங்களெல்லாம்
சம்பு சதாசிவத்தைத் தான்போற்றி யுள்ளிருத்தி

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi