அகிலத்திரட்டு அம்மானை 3751 - 3780 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 3751 - 3780 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

மிக்கப் பணமாக்கி மிகுத்தசக்க ராயுதத்தைச்
சபிக்கவே மாயன் சக்கரா யுதங்கேட்கும்
நீச னிடத்தில் என்னைப் பணமாக்கி
ஈயுறீரே சுவாமி இப்போது சாபமிட்டு
இப்போ திடுஞ்சாபம் எப்போது தீருமென்று
அப்போது சக்கரமும் ஆண்டியடி போற்றிடவே
கலிமா றும்போது கடருமென்றா ருன்சாபம்
வலியான சக்கரமும் வாய்த்தபண மாகியதே
பணமாகிக் கீழே பறந்து குதித்திடவே
இணமான நீசன் எட்டி யவன்பிடித்துக்
கண்ணில்மிக வொற்றிக் காரிகையாள் கைகொடுப்பான்
பெண்ணே நமக்குப் பெலங்கள்வந்து வாய்த்துதடி
என்று பிரியமுற்று ஈசுரரைத் தான்வணங்கி
மன்று தனில்போக வரந்தாரு மென்றுரைத்தான்
அப்போது தன்னில் ஆண்டியவ ரங்குசென்று
இப்போது இங்கேவைத்து இவன்தான் மொழிந்ததெல்லாம்
தப்பாம லாகமத்தில் தானெழுதி வையுமென்றார்
முப்போது வுள்ள முறைபோலே மாயவரும்
ஆகமத்திற் பதித்து ஆண்டார் துரிதமுடன்
நாகரீக நாதன் நடந்தார்ஸ்ரீ ரங்கமதில்

கலியுகம்

நீசனையு மூரேபோ என்று நிமலனுந்தான்
ஈயுகிற போது ஏதுரைப்பாள் சத்தியுமே
வன்னச் சிவனாரே மாபாவி கேட்டவரம்
என்னென்ன வாயமதாய் இருக்குதுகா ணுத்தமரே
வலியான மாதே மாநீசன் கேட்டதுதான்
கலியுகம் போலிருக்கு கண்ணமுதே யென்றுரைத்தார்
சிவம்வாய் திறந்து செப்பக் கலியுகமாய்
இதமான தேவர் எழுதினா ரகமத்தில்

விருத்தம்

கலியுக மெனச்சிவம் கருதிடத் தேவர்கள்
பொலிவுடன் சேர்த்தனர் புராண மீதினில்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi