அகிலத்திரட்டு அம்மானை 3691 - 3720 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 3691 - 3720 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

தேவரையும் வேலைகொள்ள சிவமூலம் பெற்றிருக்க
ஒன்றில்லாப் பேயனோடு யுத்தமிட்டா லென்றனையும்
நன்றினியப் பெண்கள் நகைப்பார்நீ யப்புறம்போ
என்று அந்தநீசன் இயம்பத் திருமாலும்
நன்றுநன்று நீசா நானுரைக்க நீகேளு
பண்டாரத் தோடே படையெடுத்தா லாண்மையில்லை
என்றேதா னிப்போ(து) இயம்பினையே மாநீசா
பண்டார மென்றும் பயித்தியக் காரனென்றும்
ஒண்டியாய் வந்தவனொ(டு) யுத்தமிட மாட்டேனென்றும்
பிச்சைக் காரனெனவும் பெரிய இரப்பனென்றும்
கச்சையில்லா னென்றும் கணைகம்பில் லாதானென்றும்
இப்படியே பண்டாரம் என்றிருக்கும் பேர்களுக்கு
எப்படியும் வம்புசெய்வ(து) இல்லையென் றுண்மையுடன்
சத்திய மாகத் தானுரைநீ பார்ப்போமென்றார்
புத்தியில்லா நீசன் புகலுவான் பின்னாலே
பண்டார மென்றும் பரதேசி யானவரைத்
தண்டரளக் கந்தைத் தலைவிரித்த ஆண்டிகளை
அட்டியது செய்யேன் அவரோடு சண்டையிடேன்
ஒட்டியே வம்பு ஒருநாளுஞ் செய்வதில்லை
என்றான்காண் நீசன் எம்பெருமாள் தானுரைப்பார்
நன்றாக இப்படியே நட்டிசெய்ய மாட்டேனென்று
ஆணையிட்டுத் தாவென்று அருளினா ரெம்பெருமாள்
வீணமட நீசன் விளம்புவா னப்போது
ஆரார்கள் பேரில் ஆணையிட வேணுமென்று
பேராகச் சொல்லு பிச்சையெடுப் போனேயென்றான்
அப்போது பண்டாரம் அகமகிழ்ந்து கொண்டாடி
இப்போது நீதான் ஈசன்தனை வணங்கி
வேண்டியே போற வெகுவரங்கள் பேரதிலும்
பெண்டிவள் பேரதிலும் பெலமாக இப்போது
ஆண்டி பரதேசி ஆகிவந்த பேர்களையும்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi