அகிலத்திரட்டு அம்மானை 3391 - 3420 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 3391 - 3420 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

தோயநாதத் துளிர் தொகைபத்துநூ றாயிரந்தான்
வாழ்வுவந்து சேர்க்கை வருசம் பதினாலு
தாழ்வு தசைநரம்பு சனித்தமுப்பத் தோராண்டில்
ஆர்க்கை எலும்பு அடைக்கும் நரம்புடனே
மூர்க்கத் தசையும் உதிரப் புனலுடம்பும்
மண்தண்ணீ ரோடே வகைக்காகாப் பாண்டமிது
விண்பரந்த வீடு வெளிவாயில் ஓட்டலுமாய்
ஓட்டை மடத்துக்கு ஒன்பது கொந்துடனே
வீட்டைப் பிரித்தால் விறகுக்கு மாகாது
விசையிட்டு ஆட்டும் வித்தாரப் பாவையிலும்
பசையில்லாப் பாவையிது பட்சியொன் றாடிவரும்
பட்சிக்குக் காயம் பகைத்துக்கிட்ட முட்டுகையில்
குச்சியைக் கீழ்ப்போட்டு குதித்தோடு மக்குருவி
இக்குருவிக் கூடு இவன்மணிய மீசுரரே
அக்குருவி யேகும் அவ்வளவு மிந்நீசன்
பண்ணுகிற நீசம் பரமனுக்கு மேராது
கண்ணிமைக்கு முன்னே கனவுருட்டுச் செய்திடுவான்
இப்படியே வுள்ள இயல்பு மிவன்நினைவும்
அப்படியே நீசம் அடைந்த மனவீடும்
உள்ளவனாய் வந்து உருவெடுத்தா னாகையினால்
எள்ளளவும் நன்றி இருக்காது ஈசுரரே
இவனாலநேகர் ஏற்றபொய்வம்போடும்
நவகோளுஞ்சொல்லி நரகமது போவார்கள்
என்று கணக்கர் எடுத்துரைக்க ஈசுரரும்
அன்று அவன்தனக்கு ஆளனுப்பித் தான்வருத்தி
ஆரைவிடு வோமென்று ஆராய்ந்து ஈசுரரும்
சூரமுள்ள காலன் தூத னெமன்தனையும்
துட்டமுள்ள பூதக் கிங்கிலியர் துர்க்கையையும்
மொட்டைக்குற ளிகளையும் முக்கோடிக் கூளியையும்
விட்டழைத்து வாருமென்று விடைகொடுத்தா ரீசுரரும்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi