அகிலத்திரட்டு அம்மானை 2911 - 2940 of 16200 அடிகள்
ஆரி ஆரிரரி ஆராரோ ஆரி ஆரிரரி ஆராரோ
தேவர்க்கும் வானவர்க்கும் திருப்பதிக ளாவதற்கும்
மூவர்க்கு முதவிசெய்து உதித்துவந்த கற்பகமோ
சென்ற இடமெல்லாம் சிறப்புவெகு மானமுடன்
மண்டலங்கள் மேய்க்க வாழுகின்ற சான்றவரோ
சாணா ருக்குள்ளே சர்வது மேயடக்கிக்
கோணாத மாயன் குருக்கொடுத் தீன்றகண்ணோ
அறிவுஞா னத்தோடும் ஆதிப் பிறவியோடும்
செறியுங் கலையோடும் செடமெடுத்த சான்றவரோ
துட்டரென்ற பேரைச் சூரசங் காரமிட்டுக்
கொட்டமிட்டுக் கோட்டை கொடிவிருது பெற்றகண்ணோ
ஆண்டிருக்கு மன்னவரோ அச்சுதரின் பாலகரோ
தாண்டி வரம்பெற்றுத் தரணியர சாண்டவரோ
பாண்டவரோ ஆண்டவரோ பாலவண்ணர் பெற்றெடுத்த
சான்றவரோ ராராரோ தழைத்திருக்க ராராரோ
ஆரி ஆரிரரி ஆராரோ ஆரி ஆரிரரி ஆராரோ
விருத்தம்
தங்கமணியோ நவமணியோ சலத்தில்விளைந்த தரளமுதோ
சிங்கக்கொடிகள் பெற்றவரோ சீமையடக்கி யாண்டவரோ
துங்கவரிசை பெற்றவரோ திருமால்விந்தி லுதித்தவரோ
சங்கமகிழ வந்தவரோ சான்றோர்வளர ராராரோ
கற்பகத்தரு
நடை
சந்தோ சமாகச் சரசுவதி தாலாட்டி
வெந்தோச மெல்லாம் விலகவே நீராட்டி
வைகுண்ட மூர்த்தி மாமுனிதன் கைக்கொடுக்க
மைகொண்ட வேதன் மதலை தனைவாங்கி
ஈசர் முதலாய் எல்லோருங் கூடிருந்து
வாசமுள்ள பிள்ளைகள்தாம் வளரத் திருவமிர்தம்
சேனைமிக வூட்டுதற்கும் செல்வ முண்டாவதற்கும்
வானத் தமிர்தம் வருத்திமிக ஈயவென்று
கயிலை தனிலிருக்கும் கண்ணான பேர்களுக்கு
அகிலமதிற் பாயும் ஆகாய வூறலதை
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 2911 - 2940 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi