அகிலத்திரட்டு அம்மானை 2851 - 2880 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 2851 - 2880 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

பாருபதி நாமம் பகருவா ளம்மானை
சென்றஇடம் வென்று சீமைகட்டித் தானாண்டு
மண்டலங்கள் தோறும் வரிசைபெற்று வாழ்ந்திருக்கும்
பொற்பமுடி மன்னரென்று பேரிட்டாள் பார்பதியும்
கற்பகத்துக் கொத்த கன்னி சரசுவதியும்
வெள்ளானை வேந்தரென்று வெண்டாமரை யுரைத்தாள்
பிள்ளையார் தானும் பிரியமுடன் மகிழ்ந்து
நன்றான வீர நகுலவேந் தரெனவே
அன்றானை முகத்தோன் அருளினர்கா ணம்மானை
சண்முகனுந் தான்மகிழ்ந்து தவலோக மன்னரென்று
விண்ணுகமு மெய்க்க விளம்பினர்கா ணம்மானை
வானோர்கள் வேத மாமுனிவர் தாமகிழ்ந்து
தானான மாயவனார் தான்பெற்ற பாலருக்குத்
தர்மகுல வேந்தரென்று சாற்றினா ரம்மானை
கர்மமில்லாத் தேவர் கரியமால் பாலருக்கு
மெய்யுடைய பாலர் மென்மேலும் வாழ்ந்திருக்க
தெய்வகுல மன்னரென்று திருநாம மிட்டனரே
வீரியமாய்ச் சூரியனும் வெற்றிமால் பாலருக்குச்
சூரியகுல வேந்தரென்று சொன்னார்கா ணம்மானை
வாசவனுந் தான்மகிழ்ந்து மாயனுட பாலருக்கு
வீசவிசைய வேந்தரென்று நாம மிட்டார்
இப்படியே நாமம் இவர்மொழிந்த தின்பிறகு
கற்புடைய சன்னாசி கருத்தாக வேயுரைப்பார்
நாட்டுக் குடைய நாதனுட கண்மணிக்குக்
காட்டுரா சனெனவே கருத்தாக நாமமிட்டார்
இப்படியே ஈசர்முதல் எல்லோரும் நாமமிட்டு
அப்படியே பிள்ளைகட்கு அவரவரே காப்பணிந்து
சத்தி யுமையும் சரசுவதி பார்பதியும்
எத்திசையு மெய்க்க எடுத்துநீ ராட்டுவாராம்
அமுதமது சேனையிட்டு எல்லோரும் தாமகிழ்ந்து

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi