அகிலத்திரட்டு அம்மானை 2671 - 2700 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 2671 - 2700 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

தீத்தழலாய்ப் போகத் திருவுருவங் கொண்டனரே
பிரமா உபதேசம் பிறப்பு உருவேற்றி
குரமாய் வருணன் குளிரத் தொளிந்திடவே
காமத் தழலாய்க் கருமேனி யானதிலே
வேமக் கனல்போல் விழிகொழுந் திட்டெரிய
சாந்தணியுங் கன்னி தையல்தெய்வ மாமணிகள்
கூந்தல் விரித்துக் கூபந் தனிலிறங்கி
அரிஓம் எனவே ஆடிக் கரையேறி
தரிதோம் மெனவே சலக்கரையை விட்டவர்கள்
உயர வரவே உள்ளுதறத் துள்ளல்கொண்டு
அயரக் கரங்கால் அங்கமெல்லாந் தொங்கலிட
கிடுகிடெனத் தேகம் கிளிமொழிவாய் கொட்டிடவே
திடுதிடென அக்கனியைத் திரைபோல் வளையலுற்றார்
கன்னி யேழுபேரும் கனலை மிகஆவ
உன்னித் திருமால் ஓங்கார மோகமதால்
மங்கை யேழுபேர்க்கும் வயிற்றிலுற்ற தம்மானை
சங்குவண்ண மாலோன் தற்சொரூபங் கொண்டனரே
உடனே ஸ்திரீகள் உள்தரித்த பிள்ளைகளை
தடமேலே பெற்றுச் சஞ்சலித்து மாமடவார்
வெருவிப் பயந்து விழிமடவா ரெல்லோரும்
கருவிதொண்ணூற் றாறும் கலங்கியே தானோடி
துகிலை யெடுத்துடுத்துச் சுருட்டினார் கங்கைதனை
கையில் சலந்தான் கட்டித் திரளாமல்
கலங்கி யழுது கண்ணீர் மிகச்சொரிந்து
மலங்கி யழுது மண்ணிலவர் புரண்டு
அய்யோ பொருளை அறியாமல் விட்டோமே
மெய்யோடே குத்தி விழுந்தழுதா ரம்மானை

விருத்தம்

கனலைத் துணையா மென்றாவிக் கற்பை இழந்தோங் கன்னியரே
புனலைத் திரட்டப் பெலமின்றி புத்தி யழிந்தோம் பூவையரே
அனலைத் தரித்த அரன்முன்னே அங்கே சென்றால் பங்கம்வரும்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi