அகிலத்திரட்டு அம்மானை 2251 - 2280 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 2251 - 2280 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

பாணிக் கிரணம் பண்ணப் பறையடித்தார்
நானிதையுங் கேட்டுநாடியுரைத்தே னென்றார்
அம்முனிவன் சொல்ல அரியோன் மிகக்கேட்டு
இம்முனிந்து போக இசைந்தார்கா ணம்மானை
மோகத்திரு மாலை முக்கோடி பொன்னதுக்கு
வேகத்தா லுண்டுபண்ணி விரைவாய்க் கொடுநடந்தார்
முழுத்திரு மாலைதன்னை மொய்குழலாள் கன்னியுடக்
கழுத்திலே யிட்டுக் காமக்கண் ணீட்டிடவே
மாயனுக்கும் மோகம் மாதுக்கும் மும்மோகம்
தேயமெங்கும் மோகம் சென்றதுகா ணம்மானை
முன்னாலே கேட்டு முகூர்த்தமிட்ட பேர்களையும்
அந்நாளே கொன்று அவன்படையுந் தானறுத்து
உருப்பிணிக்குத் தேவரெல்லாம் ஓலமிட மாலையிட்டு
விருப்புகழ்ந்த மாயன் விமான மதிலேறி
மனோன்மணியை யுங்கூட்டி மாயன் படையுடனே
வினோகர மால்தானும் விரைவாய் நடைநடந்து
வடவெல்லாந் தீர்த்து வைகுண்டப் பெம்மானும்
கடலுக்குள் சென்றிருந்தார் காயாம்பு மேகவண்ணர்
இப்படியே முன்னம் இசைந்திருந்த பெண்ணையெல்லாம்
அப்படியே மாலையிட்டு அமர்ந்திருந்தா ரம்மானை

விருத்தம்


ஆயர்குடியில் வளர்ந்து வெண்ணெய் அருந்தி முறைமா தரையணைந்து
தீயன் கொடிய கஞ்சனையும் திருக்கி யறுத்து அசுரரையும்
உபாய முடனே கொலையடக்கி உருப்பிணி முதலாய்ப் பெண்களையும்
தேயம் புகழ மணமுகித்துத் துவரம் பதியிலி ருந்தளரே

நடை

உருப்பிணி முதலாய் ஒத்துவந்த பெண்களையும்
திருப்பொருத்தம் பூட்டிச் செகலதுக்குள் வீற்றிருந்தார்

பாண்டவர் வரலாறு

கஞ்ச னிடுக்கம் கழித்தந்தக் காரணரும்
பஞ்சவர்க்கு நன்மைசெய்யப் பார்த்தனர்கா ணம்மானை
பிறந்த துரியோதனனும் பிறவியொரு நூற்றுவரும்
சிறந்தபுக ழைபேரும் தேசமதி லேவாழ்ந்து

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi