அகிலத்திரட்டு அம்மானை 1501 - 1530 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 1501 - 1530 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

கெருடன் மிகமறித்துக் கேலியிட்ட ஞாயமதும்
திருடன் கொடிய தீபாவி ராவணனும்
அம்மை தனைக்கொண்டு அவன்கோட்டை யானதிலே
செம்மையில்லாப் பாவி சிறையில்வைத்த ஞாயமதும்
எல்லா மறிந்து எம்பெருமாள் கோபமுற்று
வெல்லத் துணிந்தார் மிகுபடைகள் தான்திரட்டி
எழுபது வெள்ளம் ஏற்றவா னரங்களையும்
முழுதும் வருத்தி ஒப்பமிட் டெம்பெருமாள்
விசுவகம் மாளனையும் விரைவா யருகழைத்து
வசுவாசு மைந்தன் வாய்த்த அனுமனையும்
அனுமன் தனையேவி ஆன மலையெடுத்துத்
துனும னுடனே தோயக் கடலதுக்குள்
கோட்டைய திட்டுக் குக்குளித் தங்கேகி
ஓட்டனாய் விட்டார் உற்ற அனுமனையும்

அனுமன் தூது


பூட்டமுடன் வாயு புத்திரனுந் தான்மகிழ்ந்து
நாட்ட முடனிலங்கை நாடாளும் பாதகனைக்
கண்டு முடுகிக் கருத்தழியத் தான்பேசி
கொண்டு இலங்கை குப்பையிடத் தீக்கொளுத்தி
மால்கொடுத்த வாளி மாதுகையி லேகொடுத்து
வால்கொண்டு வீசி வனங்காவு தானழித்துக்
கேதார மாமலையும் கீர்த்தியுட னேகுதித்துப்
பாதார மென்று பணிந்தானே ராமரையும்

இராவணன் பாடு

அரக்க னவன்பேசும் அநியாயந் தான்கேட்டு
இரக்கமுள்ள எம்பெருமாள் எழுந்தார் படைக்கெனவே
படைக்கு இவர்நடக்க பார்த்துவி பீஷணனும்
அடைக்கல மென்று அவர்பாதஞ் சேர்ந்தான்காண்
சேர்ந்த வுடனே திருமால் மனமகிழ்ந்து
ஓர்ந்த படையோடே உடன்யுத்தஞ் செய்திடவே
அரக்கன் படையும் அச்சுதனார் தன்படையும்
இரக்க மில்லாமல் இருபேருஞ் சண்டையிட்டார்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi