அகிலத்திரட்டு அம்மானை 9151 - 9180 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 9151 - 9180 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அன்போர்க்கு மீந்திருநீ ஆகாப்பேர்க்கு மீந்திருநீ
வன்போர்க்கு மீந்திருநீ வழிபோவார்க்கு மீந்திருநீ
சகலோர்க்கு மீந்து தானிருநீ யென்மகனே
வலியோர்க்கு மீயு வழிபோவார்க்கு மீயு
மெலியோர்க்கு மீயு மேன்மையா யென்மகனே
ஆர்க்கு மிகவீந்தால் அந்தத்தர்ம மேகொதிக்கும்
போர்க்கு நினைத்தாரைப் பெலிகொடுக்குந் தர்மமது
தன்மந்தான் வாளு சக்கரங்க ளல்லாது
தின்மையது கேடு செப்பக்கே ளென்மகனே
சாதி பதினெட்டும் தன்னாற்கே டாகுமட்டும்
நீதி யழியாதே நீசாபங் கூறாதே.

விருத்தம்

மகனே வுனக்கு வைத்தவிஞ்சை மனதி லறிந்து கொண்டாயோ
அகமே வைத்த சட்டமெல்லாம் அதுபோல் நடந்து அல்லாமல்
உகமே யழியு முன்னாக ஒருசொல் லிதிலே குறைவானால்
சகமோ ரறியத் தீமூழ்கிச் சதியாய் மறுத்து முழிப்பாயே

விருத்தம்

நல்லோர் மகனே சொல்வதுகேள் நானோ வுரைத்த விஞ்சையெல்லாம்
வல்லோ னான திருமகனே மனதி லறிந்து அறிந்துநட
எல்லாம் நமதுள் ளாச்சுதென்று எண்ணி நடப்பொன் றுன்னாலே
சொல்லால் தாண்டி நடப்பீரால் தீயே குளித்து வருவாயே

விருத்தம்

கொடுக்கும் வரங்களு னக்கீந்தேன் கொடுத்த வரத்தை பறிப்பதற்கு
உடக்கு வரமுந் தந்தேனான் உன்ற னாணைத் திருவாணை
அடக்கு முடக்குந் தந்தேனான் ஆதி சிவனா ரவராணை
நடக்கும் படியே சட்டமெல்லாம் நாரா யணனே தந்தேனே

விருத்தம்

தந்த வரங்கள் தவறாது தருணஞ் சடையுந் தரைமீது
எந்தன் மீது மறவாதே என்னாண் டருளு மிறையோனே
அந்தன் மீது மறவாதே ஆயா னெனவே அறிவில்வைத்துச்
சிந்தை மகிழ்ந்து முறைநடந்தால் சிவனு முனக்குள் வசமாமே

விருத்தம்

தாயா ரோடு சிவமாது சரசு பதியே பொன்மாது
நேயா மாதர் மடமாது நீணில மறிய வந்துனது
பூசா பலன்கள் சொல்லிமிகப் புலம்பித் திரிவார் துயர்தீர

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi