அகிலத்திரட்டு அம்மானை 15571 - 15600 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 15571 - 15600 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

இத்தனையுந் தோற்று இப்போ நரகமதில்
செத்திறந்து போகவுன் தலையில் விதியாச்சே
உன்விதியாங் நீயும் உயிரழிந்தா யல்லாது
என்னதி காரத்தால் ஆக்கினைகள் செய்கிறேனோ
உன்னால் நீமாள ஊழிவிதி யானதல்லால்
என்னாலுனைநான் இடுக்கமது செயகிறேனோ
தன்னாலே தான்கெட்டுத் தான்போவா ரென்றபடி
உன்னாலே நீயும் உயிரழிந்தாய் மாபாவி
ஒருபிறவி தன்னிலுன்னை உயிரழிக்கக் கூடாதே
கருவருளும் நாதன் கற்பினைக்கே ராதெனவே
பிறவியே ழுன்னைப் பெரும்புவியி லேபடைத்துத்
திறவிப் பொருளோன் சிந்தை மிகஅறிய
உகத்துக் குகங்கள் உத்தமனாய் நான்பிறந்து
மகத்துவமா யுன்றன் மனதைமிகப் பார்த்தேன்
எள்போலே தர்மம் ஈத லிரக்கமுடன்
நட்பேதுங் கண்டிலனே நன்றகெட்ட மாபாவி
ஏழு பிறவியிலும் என்பேரு சொல்வோரைக்
கோளுசெய் தவரைக் கோட்டிக்கொண் டேயடித்துச்
சிறைக்கா வல்தன்னில் திட்ட விலங்கில்வைத்து
அறையான துகொடுத்து அட்டிமிகச் செய்ததல்லால்
இரக்க முடன்தயவு இல்லையே உன்னிடத்தில்
அரக்கர் குடும்பம் ஆனதிலா லுன்னுடைய
மனதிரக்க மாகாது மாபாவி நீகேளு
கனத்த அதிகாரம் காட்டிநீ மாண்டாயே
முன்னாள் குறோணி உதித்துவந்த மூன்றுகமும்
தன்னாலே நீபிறந்து தாண்டி யதுகளித்துப்
பின்னாள் பிறந்தாய்ப் பெருங்கிறே தாயுகத்தில்
அந்நாளில் நீங்கள் அண்ணனென்றும் தம்பியெனும்
பிறந்தீர் படைகள் பெருத்தசனக் கூட்டமுடன்
சிறப்பதிலும்பெரிய செல்வமா யாண்டிருந்தீர்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi