அகிலத்திரட்டு அம்மானை 12421 - 12450 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 12421 - 12450 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சென்ற இடமெல்லாம் சிறப்பதிக முங்களுக்கு
என்றைக்கும் நல்ல இயல்பே யருள்வோமென
நல்ல விடைகொடுத்து நாரா யணரனுப்ப
வல்ல வளர்சான்றோர் வாழ்த்தி யவர்போனார்
அவரவர்கள் வீட்டில் அன்பாகப் போனவுடன்
இவரிவர்க்கு நல்ல இயல்புசெய்ய வேணுமென்று
ஏகபர நாதன் எம்பெருமா ளானவரும்
லோகமதி லெம்பெருமாள் ஒருசொரூபங் கொள்ளலுற்றார்
இரப்ப வடிவாய் எடுத்தா ரொருவேசம்
பரப்ப வடிவைப் பாருள்ளோர் கண்டுகண்டு
கோட்டைக் கணக்காய்க் குளிர்ந்தநெல் லேயெடுத்துச்
சாட்டமுடன் காய்கனிகள் சகல வகையுடனே
பழங்கள் முதலாய்ப் பப்படமும் பாயசமும்
வளங்க இலையிட்டு வற்றல்வகை சீனியுடன்
அன்ன முதல்தானம் ஆடையொடு பொன்தானம்
சொர்ணத் தானமுதலாய்த் துவையல்கா ரர்ககெனவே
சான்றோ ரினத்தில் சார்ந்தன்பு கொண்டோர்கள்
ஆண்டோ னருளால் அன்னவஸ்த்திரங் கொடுத்தார்
நித்தம்நித்த மன்னம் நீங்களுண்ணு மென்றுசொல்லிச்
சித்த மிரக்கமதால் துவையற்கா ரர்க்கெனவே
இடைவிடா தபடியே ஈந்தாரே அன்னமது
வடவெல்லாந் தீர்ந்து மகிழ்ந்திருந்தார் துவைத்திருந்தோர்
நாலு திசையதிலும் நடந்துபிச்சை தான்குடித்துப்
பாலு பவிசுடனே பாவித்தி ருந்தனராம்
இப்படியே சான்றோர் இனமா யிருந்தவர்கள்
அப்படியே பிச்சையிட்டு அன்பாய் மகிழ்ந்திருந்தார்
பாங்கா னதுவையல் பண்டா ரங்களெல்லாம்
பூங்கார மாகப் பிச்சையமு துண்டிருந்தார்

அய்யாவை முட்டப்பதிக்கு அழைத்தல்


இந்தப் படியே இவர் வாழும் நாளையிலே
சொந்தத் திருமால்க்கு சுவாமி யுரைத்தபடி

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi