அகிலத்திரட்டு அம்மானை 14521 - 14550 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 14521 - 14550 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

தனுவாய்ப் புருஷனுட தன்வாக்குக் கேளார்கள்
தெய்வ நிலைகள் தேசமதில் காணாது
மைநெறியப் பெண்ணார் மனுநீதங் காணாது
இராச நெறிநீதம் இராத்தியத்தில் காணாது
பிராயம் வருமுன்னே பெண்கள் நிலையழிவார்
தெய்வ மடவார் தேசமதி லேவருவார்
வைய மறிய மாலையிட்டு வாழ்ந்திருப்பார்
பார்பதியாள் ஈசொரியாள் பரமே சொரியாளும்
சீர்பதியாள ளான சீதாதே விமுதலாய்க்
கன்னி குமரி கயிலைபுகழ் மாதரெல்லாம்
உன்னி யவர்கள் ஒருதலத்தி லேகூடி
வாழ்ந்திருப்பார் மங்களமாய் மக்கள்கிளை வாழ்வுடனே
தாழ்ந்திறந்து மாகலியன் தன்னால் மடிந்திடுவான்
தானமதுமாறி தானிறப்பார் கோடியுண்டு
வானஇடியால் வம்பர்சிலர் மடிவார்
பெண்ணாலே ஆணழிவு ஆணாலே பெண்ணழிவு
கண்ணான மதலை கைமதலை தானழியும்
நட்சத்திரத்தால் நாலிலொரு பேரழிவார்
இச்சை மிகுதியுள்ள இயலான மானிடவர்
நஞ்சுதின்று அழியும் நாண்டுகொண்டு தானழியும்
வஞ்சினத்தாலே வலுவிலங்கிலி ருந்தழியும்
மூட்டைக்கடித்தால் மோசம்வரும் சிலருக்கு
நாட்டில் பலகேடு நாளுக்கு நாளுண்டாகும்
துட்டமிருகமதால் நட்டமிகக்காணும்
துட்டவியாதிக்கூடி நட்டப்படுத்துஞ்சிலரை
பொய்யொடு பசாசு புகிந்துநகர் அழியும்
வைகுண்டர் முடியாழும் வையகத்து சான்றோரை
இப்படியே யிந்தக் கலிமாயும் லக்கெனவே
அப்படியே மாமுனிக்கு அருளச் சிவனாரும்
பின்னு முனியும் பிஞ்ஞகனோ டேகேட்பான்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi