அகிலத்திரட்டு அம்மானை 15721 - 15750 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 15721 - 15750 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

என்று உனக்கிருந்த உயிரையுமே யழித்து
சொன்னதம்பி மாரைச் சொல்லால் மிகத்துரத்திச்
சின்னஞ் சிறுவன் தசரதனார் பாலனுடப்
பெண்ணவளாஞ் சீதையெனும் போகச்சொல் லென்றனையே
மண்ணாள வேணுமென்றால் வணங்கிப் பணியென்றும்
அல்லாதே போனால் அலக்கழி வாகுமென
எல்லாம் பெரிதாய் என்னோ டுரைத்தாயே
பார்த்தால் சிறுவன் பைங்கிளியாள் தன்புருஷன்
காற்றா னதிற்பறக்கும் கடிய துரும்பெனக்கு
அவனுடைய பெண்ணாம் ஆதிசீதா லட்சுமியாம்
இவளுடையப் பேரால் இராச்சியங்கே டாயிடுமாம்
ஆமோடா நீங்கள் அரக்கர் குலமோடா
போமோடா என்றன் பூமுகத்தில் நில்லாதே
என்றே யெனையும் இழப்ப மிகப்பேசி
அன்றே யவர்பேச்சை அல்லவென்று தட்டிவிட்டாய்
அப்போ தவர்கள் அன்பாக என்னுடைய
செப்போடு வொத்தத் திறமெல்லாஞ் சொல்லிடவே
சின்னக் குழந்தையென்றுஞ் சீதையொரு பெண்ணெனவும்
மன்னவனே யுன்மனதில் வைத்துமிகக் கொள்ளாதே
நாட்டுக் குடைய நாரணரே ராமனென்றும்
கூட்டுக் கிளியானக் கோதைசீதா லட்சுமியாள்
முட்டாளா வுன்றன் முழுநீசப் புத்தியினால்
அட்டாள பூமி அடக்கியர சாளுகின்ற
பகுத்தைக் குலையாத பழிக்கிரையாய்ப் போகாதே
தொகுத்த வுரைபோலே சீதைதனை விட்டுவிடு
என்றுரைத்தார் பின்னும் இருவ ருன்தம்பியர்கள்
அன்று வுனக்கு அதிகக்கோப முண்டாகி
என்னுடைய கண்முன் இப்போது நீங்கள்நின்றால்
உன்னிருபேர் தங்கள் உற்றச் சிரசதையும்
அறுத்து வதைப்பேன் வனமதிலே போயிடுங்கோ

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi