அகிலத்திரட்டு அம்மானை 9181 - 9210 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 9181 - 9210 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

மாயா திருக்கு மகனேவுன் மனமே மகிழ்ந்து மகிழ்ந்திருவே

விருத்தம்

சொல்ல எளிதோ என்மகனே சொல்லா தனேகம் தோன்றுமினி
வெல்ல எளிதோ என்மகனே மேலோரா ராரா லும்
கொல்ல எளிதோ வுனைமகனே கோவேங் கிரியின் கோனாலும்
வெல்ல எளிதோ வுனைமகனே மேலாங் கண்ணே மிகவளராய்

விருத்தம்


இந்தப் படியே நாரணரும் இயம்ப மகவு ஏதுரைக்கும்
கந்த னுறுவே லென்றகப்பா கடியா வுனது படிநடக்க
எந்தப் படியோ நான்றமியேன் ஏதோ அறியப் போறேனெனச்
சிந்தை மகிழ்ந்துத் தகப்பனுட திருத்தாள் பிடித்துச் செப்பலுற்றார்

நடை


தன்னம் பெரிய தாட்டீக வைகுண்டரும்
என்னசொல்வீ ரென்றனக்கு என்றகப்பா நீரெனவே
வணங்கிப் பதம்பூண்டு மாதாவை யுந்தொழுது
இணங்கி யிவர்கேட்க ஏதுசொல்வார் நாரணரும்
நாராணா வைகுண்டா நன்மகனே என்னையினி
வாரணமே நீவணங்கி மகனே கைசேராதே
நீகை குவித்தால் எனக்குமிகத் தாங்கரிது
தானீத னான சர்வபரா என்மகனே
ஒருவருந் தாங்கரிது உன்கை குவித்தாக்கால்
குருதெய்வம் நீயே கோவே குலக்கொழுந்தே
இன்ன முனக்கு இயம்புகிற விஞ்சையதும்
பொன்னம் மகனே பூராய மாய்க்கேளு
சாதி பதினெட்டும் தலையாட்டிப் பேய்களையும்
வாரி மலையதிலும் வன்னியிலுந் தள்ளிவிடு
வரத்தை மிகவேண்டி வைத்துக்கொள் ளென்மகனே
சரத்தை மிகவாங்கித் தானனுப்புப் பேய்களையும்
உட்கோள் கிரகம் உறவுகெட்ட பேர்முதலாய்க்
கட்கோள் கருவைக் காணாதே சாபமிடு
செல்வம் பொருந்திச் சிறந்திரு என்மகனே
கொல்லென்ற பேச்சுக் கூறாதே என்மகனே
ஒவ்வொன்றைப் பார்த்து ஊனு ஒருசாபம்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi