அகிலத்திரட்டு அம்மானை 15631 - 15660 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 15631 - 15660 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

என்னோ டேபோர்க்கு எதிராக வந்தாயென்றால்
உன்னோ டேயுள்ள உற்ற திறத்தாலே
சண்டைக்கு வாடா தாட்டாண்மைப் பார்ப்போமென்றாய்
விண்டதெல்லாம் பார்த்து வேலா யுதமெடுத்து
அப்போது வேலால் அறுத்தேனா னுன்சிரசை
முப்போது உள்ள முழுக்கிளைக ளத்தனையும்
சேரக் குலமறுத்து சேனையெல் லாமழித்துக்
கோட்டை யழித்துன் குவாலத்தைத் தானழித்துக்
கேட்டேனா னுன்னோடு கெறுவிதமே னென்றுரைத்தேன்
சத்தி வேலாலே சத்தியென்னைச் சங்கரித்தாள்
புத்திகெட்ட ஆண்டி போதுமோ என்னையெல்
என்றாயே பாவி ஏற்றயுக மன்றழித்து
அன்றே யுனையும் அதிலோர் பிறவிசெய்தேன்
அந்நா ளுன்பேர்தான் அதிக இரணியனாய்
துன்ஞாய மாய்நீ தோன்றி முடுக்கமதாய்
அரிநமோ வென்ற அட்சரத்தையு மாற்றி
மதியாம லுன்பேரை வளங்கினா யவ்வுகத்தில்
ஆதி சிவமறிந்து அசுரா வுனையறுக்க
மாதிரிபோ லென்னை வகுத்தாரே யுன்மகவாய்
மகவா யுனக்கு மாய வுருவெடுத்து
உகமே ழறிய உதித்து வளருகையில்
பள்ளியிலே சென்று படிக்கின்ற நாளையிலே
தெள்ளிமையச யுன்பேரைச் செய்பென்றான் வாத்தியானும்
உடனே நான்மாறி ஒருஅசுரன் பேரதையும்
தடமே லுரைத்தால் தருணமது காத்திடுமோ
படைத்த குருவின் பருநாமஞ் சொன்னதுண்டால்
சடத்தை மிகக்காக்கத் தருண முதவிசெய்வார்
ஆனதாற் பெரிய அரிநமோ அல்லாது
மானமில்லாப் பாவி மாபாவிச் சூரனுட
ஏற்ற பேரான இரணிய நமாவெனவே

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi