அகிலத்திரட்டு அம்மானை 15391 - 15420 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 15391 - 15420 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

முடுக்க முடனிந்த உற்றசிங் காசனத்தில்
தவம்போ லிருந்து தானாளு குண்டமதில்
சுகமேஇருமகனே சுத்தகணத்தோனே
ஆளுநீ யரசு ஆண்மை குறையாமல்
நாளு வரைமகிழ்ந்து நலமாக வாழ்ந்திருநீ
அனுப்புகின்ற பொய்ச்சொரூபம் ஆங்கார மற்றவுடன்
மனுப்புகழ நாமள் வையகத்தின் மீதிறங்கி
நிச்சித்து வைத்த நினைவா னதின்படியே
வச்சிருந்த நற்பதியில் வாழலாங் கண்மணியே
என்றரைத்து மாகலியில் ஏற்றபொய் வேசமதாய்
குன்று தனிலிருந்து கோலமொன்று தானனுப்ப
வந்தங்கு குதித்ததுகாண் வையகத்தி லம்மானை
நந்த னானென்பான் நாரணர்க்கோன் ராமனென்பான்
முந்தச் சுவாமிகட்டு முன்னுதித்து வந்தேனென்பான்
செந்தழல்போல் நின்றிடுவான் சிட்டுப்போ லேபறப்பான்
கண்டகண்ட அற்புதங்கள் கண்ணாரக் காட்டிடுவான்
பண்டையுள்ள வைப்பைப் பாரறியக் காட்டிடுவான்
தீர்க்கமுட னற்புதங்கள் திடீரெனவே காட்டிடுவான்
மார்க்கம் பலதணிவான் வைகுண்ட மென்றிடுவான்
கடலில் நடப்பேனென்பான் கனலி லிருப்பேனென்பான்
மடவாரை யெல்லாம் மாலை யிடுவேனென்பான்
இப்படியே கோடி எண்ணிறந்த அற்புதங்கள்
செப்பிடுவான் பூமியிலே தேச நருள்மலங்க
சூட்ச மநோகம் சொல்லொணா வித்தையதாம்
தூட்ச மறியாமல் தொல்புவியெல் லாமயங்கும்
இந்தப் படியாய் இருக்கின்ற நாளையிலே
முந்த வைகுண்ட முடிசூடி வாழ்ந்திருப்பாய்
சிவனு முமையாளும் செய்யத் திருமாலும்
தவமுனி வர்களும் சரசுபதி மாதுமையம்
நான்முகனும் வேத நல்ல மறையோரும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi