அகிலத்திரட்டு அம்மானை 13831 - 13860 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 13831 - 13860 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

மணமுகித்து மாதருக்கு முன்வகுத்த மைந்தரையும்
குணமுடனே காட்டிக் கொடுத்தாரே யெம்பெருமாள்
நல்ல திருநாள் நாள்கழித்து மற்றாம்நாள்
வல்ல கதிரோனும் வந்ததுகா ணம்மானை
கதிரோனுந் தோன்றிக் கங்குலவெளி யாகுகையில்
திருநா ளிகனை செய்து நிறைவேற்றி
மக்களெல்லாஞ் சூழ வந்து மிகப்பணிந்து
மிக்கஅவர் வீட்டில் விடைவேண்டித் தாம்போனார்
கைக்குள்ளே நிற்கும் கரியச் சன்மாரும்
மைக்குழல் மாரோடும் மகிழ்ந்திருந்தா ரம்மானை
பின்னுஞ் சிலநாள் பெரியதிரு நாள்நடத்தி
மன்னுகந்த நாரணரும் மாதரொடு வீற்றிருந்தார்
பெண்க ளவரவர்க்குப் பெரிய அரங்குவைத்துத்
தங்கள் தங்களுக்குச் சாமான்க ளுங்கொடுத்துப்
பால்பவிசுங் கொடுத்துப் பாக்கியங்கள் மிகுவாய்
மாலவர்கள் மனையில் வந்து அமுதருந்தி
இன்றொரு வீட்டில் ஏற்ற அமுதருந்தி
அன்றிரா அங்கே அனந்தமால் பள்ளிகொண்டு
பின்னுமொரு மாதருட பொன்னரங்கில் வந்திருந்து
அன்று அமுதருந்தி அன்றிரா அம்மனையில்
பள்ளிகொண்டு இப்படியே பாவையர்கள் வீடோறும்
துள்ளியே மாயன் திருவிளையாட் டுமாடி
மங்கையர்கள் காணாமல் மறுமனைக ளும்புகுந்து
கொங்கைமட வாரோடு கூடிவிளை யாடிடுவார்
மாயன் விளையாட்டை வகைப்படியே சொல்லவென்றால்
வாய்ந்த வுலகில் வளர்ந்தபனை யோலையில்லை
கூடி மடவாரோடு குவிந்துவிளை யாடுகையில்
நாடி மடவார்கள் நாயகிமார் தங்களுக்குள்
ஒருவர்க் கொருவர் உபாயமாய்ப் பார்த்திருந்து
திருமருக ரோடே தெய்வமட வார்வெகுவாய்ச்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi