அகிலத்திரட்டு அம்மானை 15841 - 15870 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 15841 - 15870 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

மால் நோக்கி தானிருக்கத் தடதடெனச் சேடனது
நிரந்ததை மூடி நிரத்தியதே யம்மானை
பரந்தந்த சேடன் பாரைநிரப் பாக்கியபின்
உற்ற வைகுண்டர் உறுசங் கூதினரே
வெற்றியாய்ச் சங்கு விரைவாக ஊதிடவே
எத்திசை யிரேழும் இந்தசங் கோசைமிக
கற்பு நெறியானக் கடிய பலவகையும்
நல்லோர்க ளான நாடு மனுவோரும்
நல்பூமி நல்விருட்சம் நல்மிருக மூர்வனமும்
கீழ்மேல் நடுவுங் கிரணமண்ட பமூன்றில்
நாள்மேல் பெரிய நல்லவகை யானதெல்லாம்
தன்ம முதல்நீதம் தவசு நிலைமைமுதல்
நன்மை பலதும் நாடிமிக வந்ததுவாம்
எல்லாம் வைகுண்டர் இட்டசத்த மீதில்வந்து
நல்லாகக் கண்டு நாரணரைத் தான்போற்றி
வைகுண்ட சுவாமி வரவேணு மென்றுசொல்லி
மெய்கொண்ட ஞான மிக்கத தவம்புரிந்தால்
வந்துசந்த மொன்றில் வரவழைப்போ மென்றுசொன்னச்
செந்துயிர்க் காக்கும் சிவகுண்டம் வந்தீரோ
தன்ம வைகுண்ட சுவாமிவந்தா ரென்றுசொல்லி
நன்மை பலசெந்தும் நன்னதிகப் பட்சிகளும்
பசுமைக் குணமான பலமிருக வூர்வனமும்
கசுவிரக்க மானக் கற்றாவின் தன்னினமும்
நால்வேத நீதம் நாடுகின்ற சாஸ்திரமும்
சில்வாடை பிச்சி செந்தா மரைமலரும்
தங்கநவ ரத்தினமும் சமுத்திரத்து நல்வகையும்
கங்கைக் கண்ணாளும் கமலப்பூ வாணிமுதல்
தர்ம மதும்போற்றி சுவாமி யெனத்தொழுமாம்
பொறுமை அருள்நாதப் பெரியவைகுண்டரும்
முழித்த மனுக்களுக்கும் மொய்குழலார் தங்களுக்கும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi