அகிலத்திரட்டு அம்மானை 15451 - 15480 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 15451 - 15480 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

குருபூமி யானக் கூண்டதாயகப் பொற்பதியும்
பொன்பதியும் நற்றெருவம் பெரியதெப்ப வாவிகளும்
அன்பதிய நல்மனுவும் அனுகூல மாயுதித்தார்
எம்பெருமாள் முன்னே யாம முரைத்தபடி
வம்பரெல்லா மாண்டார் மனதுகந்தோர் தாமுழித்தார்
தன்ம யுகத்துக்குத் தானேற்ற வஸ்துக்களும்
நன்மையுடன் தன்னால் நாடி மிகக்குதித்தார்
நல்ல யுகத்தர்ம நாடு மிகக்குதித்தால்
வல்லவை குண்டமதாய் வந்தவுடன் வாருமெனச்
சொல்லி யயைச்சிருத்த சுத்த மிருகமதும்
நல்ல மனுவோரும் நற்பறவை யானதுவும்
விருட்ச மதுவும் மேலுகந்த வஸ்துக்களும்
வாருமெனச்சொன்ன வகையெல்லா மேமுழித்தார்
ஆருமிக வொவ்வாத அரியோ னகமகிழ்ந்து
சீருகந்த நாதன் திருமால்சந் தோசமதால்
ஆகாத்த தெல்லாம் ஆழிதனை வருத்தி
கூகாய் எரித்து வன்னரகில் தள்ளிமிகச்
சுத்த யுகத்தைச் சுத்தி வருத்துமென்று
கற்றைக் கங்கையாட்குக் கரியோன் விடைகொடுத்தார்
விடைவேண்டி வாரி விமலன் மொழிந்தபடிக்
கடல்வாரி செய்து கமலயுகஞ்சுத்திபண்ணிக்
கர்த்தனரி நாரணரைக் கடலுமிகத் தெண்டனிட்டு
முத்தனரி நாதன் முன்னுரைத்த நீசனெனக்
குறோணி அவனுயிரைக் கொண்டுவந்து முன்னிறுத்திச்
சுறோணிதப் பாவி சொல்லடா உத்தரங்கள்
ஏழு பிறவி இதுவரையுஞ் செய்துவுன்னை
வாழுநீ யென்று வரமருளிப் பார்த்தேனே
இக்கலியில் நானும் இரப்பனைப்போல் வந்திருந்து
மிக்க உலகறிய வெறிப்பேயை யுமெரித்துத்
தண்ணீரால் மானிடர்க்கு சகலநோய் தான்தீர்த்துப்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi