அகிலத்திரட்டு அம்மானை 9121 - 9150 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 9121 - 9150 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

பொறுதி மகனே பெரியோரா யாகுவது
உறுதி மகனே உலகமதை யாளுவது
மகனேநா னெத்தனையோ மகாபெலங்கள் கற்றவன்காண்
உகமீதே சொல்லித் தொலையுமோ வுத்தமனே
எவ்வுகங் களுக்கும் இப்படியே தர்மமில்லை
செவ்வுமகா விஷ்ணுதான் என்றுசொல்லார் தேசமதில்
இப்போது என்மகனே இக்கலியன் மாய்மாலம்
செப்ப எளிதல்லவே செயிக்க ஏலாதாராலும்
இப்போதுன்னோ டுரைத்த இயல்விஞ்சைக் ககப்படுங்காண்
அப்பனே பம்மலிலே அகப்படுங்கா ணிக்கலியும்
கலியென்றால் எலியல்லவே கணையாளி வேண்டாமே
வலிமாய நினைவு மாய்மால மென்மகனே
ஆனதா லாயுதங்கள் அம்புதடி வேண்டாமே
மானமாக இருந்தால் மாளுங்கலி தன்னாலே
இன்னமொரு விஞ்சை இயம்புவேன் கேள்மகனே
முன்னம்வகைக் காரனொடு மோதிப் பகையாதே
பகைத்தா லிருக்க வொட்டான்கா ணவ்விடத்தில்
உகத்தடக்கு முன்னே ஒருவரையுஞ் சீறரிது
தாழ்ந்திருக்க வென்றால் சர்வதுக்குந் தாழணுமே
ஓர்ந்திருக்க வென்றால் ஒருவர்பகை யாகாதே
ஆனதால் நீயும் அவனைப் பகையாதே
நானவனைக் கேட்பேன் ஞாயக்கே டாகிடினும்
வலியோர்க் கொருவழக்கு வைத்துநீ பேசாதே
மெலியோர்க் கொருவழக்கு வீணாய்ப் பறையாதே
சொத்தாஸ்தி வஸ்து சுகமென்று எண்ணாதே
வத்தாஸ்தி பெண்ணு வகையென்று எண்ணாதே
நீயெண்ணா தேயிருந்தால் நீணிலங்க ளுமயங்கும்
தானிதின்மே லெண்ணம் தங்குதங் காதேயிரு
சத்துரு வோடும் சாந்தமுட னேயிருநீ
புத்திர ரோடும் பேசியிரு என்மகனே

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi