அகிலத்திரட்டு அம்மானை 15511 - 15540 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 15511 - 15540 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சுழிமுனையை முத்தி சோமனருள் உள்ளிருத்தி
பழிபாவம்சற்றும் பார்மீதில் எண்ணாமல்
உடுக்கத் துணிகளற்று உண்ணவூண் தானுமற்று
படுக்க இடமுமற்றுப் பரமார்த்த மாயிருந்து
சாதிபதி னெட்டதுக்கும் யாம முறைப்படியே
நீதியுடன் தண்ணீரால் நொம்பலங்கள் நீக்கிவைத்தேன்
நீயறிந்துங் கண்டும் நீணிலத்தோர் தாமறிய
வாயிலிடும் வெற்றிலைக்கு மனுவோர் தடவுகின்ற
சுண்ணாம் பானாலும் தொட்டுநீ தந்தாயோ
எண்ணாமல் நீயும் என்னை மிகப்பழித்துப்
பாவிநீ என்னைப் பரிசுகெடத் தானடித்து
மேவிநா னிட்டுருந்த வெற்றிசுரக் கூடதையும்
உடைத்துத் தகர்த்தாயே உற்றகந்தைக் காவியையும்
மடத்தனமாய் நீயும் வலித்துக் கிழித்தாயே
தோளிலிடும் பொக்கணத்தைத் தூக்கியென்னைக் கீழ்ப்போட்டுத்
தூளிபட வுதைத்துத் துண்டுதுண்டாய்க் கீறினையே
ஐயோ நீசெய்த அநியாயஞ் சொல்லவென்றால்
வைய மீரேழும் வழிந்து நிரம்பிடுமே
பத்தினியாள் பெற்ற பாலதியச் சான்றோர்கள்
மெத்த அவர்நன்றாய் விளங்கிருக்கணுஞ் சிவனே
ஆடை யில்லாமல் அலமாந் திருக்கையிலே
நாடதிக மான நல்லபட்டு நீராளம்
தங்கச் சரிகைத் தலைப்பாக் குல்லாவுடனே
மங்களமா யென்னை வந்தெடுத்துத் தானுடுத்திப்
பாலும் பழமும் பருந்தேனும் சர்க்கரையும்
மேலும் நவநிதியம் வேண்டும் பலகாரம்
அன்னங்காய் சொர்ணம் அன்பாகக் கொண்டுவந்துப்
பொன்னப்ப நாரணரே பெற்றவரே
வாயி லெடுத்திட்டு வளமாக என்றனக்குச்
சாயத் தலையணையும் சரிகைத்தொட்டில் மெத்தைகளும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi