அகிலத்திரட்டு அம்மானை 10861 - 10890 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 10861 - 10890 of 16200 அடிகள்


akilathirattu-ammanai

திட்டிச்ச அய்யாணை சேர்ந்து வரங்கள்வைத்து
விட்டுருந்தச் சாவுபிழை சங்கிலிகள் தானும்வைத்து
மலையேறி யொக்க மாண்டுபோ வோமெனவே
விலையாய்ப் பலகையிலே விரித்தடியுஞ் சத்தியமாய்
அய்யா வுரைத்த ஆணை தவறாமல்
மெய்யாகப் பேய்கள் விளம்பிவைத்து தம்மானை
அய்யாணை அய்யாணை திட்டிச்ச அய்யாணை
மெய்யாணை எங்கள் மிக்கவரங்கள் வைத்தோம்
தந்தபிழை சாவு சங்கிலிக ளானதுவும்
எந்தன் குலமுழுதும் இப்போ வரமும்வைத்து
அய்யாணை நாங்கள் அருமலைகள் தானேறி
மெய்யாக அக்கினியில் விழுந்துசெத்துப் போவோமெனச்
சொல்லிப் பேயெல்லாம் சுத்தவர மத்தனையும்
பல்லுயி ருமறியப் படித்துவரம் வைத்ததுவே
வைத்த உடனே வைகுண்டர் முறைப்படியே
மெய்த்தபுகழ் சான்றோர் மெய்வாயுங் கையாலும்
ஆகாத்த தெல்லாம் அழித்திடு வாரனவே
வாகாக முன்னூல் ஞாய வழிப்படியே
வாணாள் மறுகி வாதைவரம் வைத்தவுடன்
சாணா னொருவிரலால் சற்றேதொட வைத்தனரே
தொட்டிடவே பேயும் சுற்றுமனு நருளும்
பட்டு விழுந்தாற்போல் பாரறிய தான்விழுந்தார்
உடனே மனுவழியில் உடைய குலச்சனங்கள்
படபடெனத் தூக்கிப் பதங்கோரி விட்டிடவே
அசதி தீர்ந்தாற்போல் அந்த நருள்முழிக்கும்
செய்திதனை யெல்லாம் சீமை நருளறியும்
கண்டு கொண்டாடிக் காரணத்தின் ஞாயமென்று
மன்று பதினாலும் கண்டு மகிழ்ந்திருந்தார்
இப்படியே பேய்கள் எல்லாம் வரங்கள்வைத்து
அப்படியே பேய்கள் அருமலைபோய் மாண்டதுவே

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi