அகிலத்திரட்டு அம்மானை 10891 - 10920 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 10891 - 10920 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

மலைதனிலே வந்து மாண்டசெய்தி தானறிய
இலையி லாடிட்ட இடையர்மிகக் கண்டுளறி
அய்யோபேய் மலையில் அலறிக் கரிவதுதான்
மெய்யாகக் கண்டு மிகப்பதறு தெங்கள்மனம்
அழுதுமுறை யிட்டுப்பேய் அக்கினியில் சாடுவதும்
முழுது மலைகள் முழக்கிக் கிடுகிடென
ஆடு மிகப்பதறி அம்மலையில் மேயாமல்
சாடுதுகாண் தரையில் சாரங்கள் சீமானே
என்று இடையர் இயம்பக்கேட் டெம்பெருமாள்
அன்று நருளறிய அவர்போ தித்தார்சாட்சி
கேட்டு மனுநருட்கள் கெட்டிகெட்டி யிந்தமுறை
நாட்டுக் குடைய நாரா யணரிவர்தான்
மன்று தனையளந்த மாயத் திருநெடுமால்
என்று பலரும் இயல்பா யறிந்திருந்தார்

விருத்தம்
ஆகமப் படியே பேய்கள் அதினுட வரங்கள் வாங்கி
லோகங்கள் அறியக் காட்டி யுகபர சாட்சி நாட்டி
வேகத்தில் மந்திர தந்திர விசையெல்லா மடக்க வென்று
நாகத்தி லுண்டு வாழும் மலையரசனை வருத்த வென்றார்

விருத்தம்

வருத்தவே வேணு மென்று மகாபரன் மனதி லுன்ன
விருத்தமாய் மலையில் வாழும் மிருகங்கள் கோப முற்றுத்
துரத்தலைக் கண்டு மெத்தத் துயரமுற் றயர்ந்து மந்திர
வருத்தலைச் செய்து பார்த்து மலைந்தன னரசன் தானே

மந்திரவாதிகளின் விசையடக்குதல்

நடை

மந்திர தந்திர மாமுனிவன் சாத்திரங்கள்
விந்தைசெய்யு மாய்மால விசையடக்க வேணுமென்று
நினைத்த வுடனே நெடுமலையில் தான்வாழும்
அனர்த்த மிடும்மிருகம் ஆனை புலிகடுவாய்
கடுகிக் கரடி கனத்தமந் திக்குரங்கும்
முடுகி யெழுந்து மூச்சுவிட் டேவிரைவாய்ச்
சீறி யெழுந்து சென்றுமலை யில்வாழும்
கூறித் தொழில்கடிய குன்றரசர் தங்களையும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi