அகிலத்திரட்டு அம்மானை 10831 - 10860 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 10831 - 10860 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சொல்லொன்றுக் குள்ளான சுவாமி வரங்கள்பெற்றுக்
கொல்லென் றெங்களையும் கொல்லத் துணிந்தீரே
என்றுபே யெல்லாம் எண்ணியெண்ணித் தானழுது
அன்று அழுது அவர்வரங்கள் வைக்கலுற்றார்
காந்த லிடியும் கனத்தவலுச் சக்கரமும்
சூழ்ந்து குத்தல்கண்டு சுருண்டு மிகப்பேய்கள்
ஐயோ சுவாமி அடியார்க்குத் தந்தவரம்
வையோ ரறிய வைக்கிறோ மென்றுரைத்தார்
உடனே வைகுண்டர் உற்றநா ராயணரும்
திடமுடனே பேயோடு உரைக்கிறார் சீமானும்
அணியில்லாப் பேயே அன்றுதந்த வரத்திலொரு
மணியிருக்கு தானால் மாறியென் னோடுரையும்
அப்போது பேய்கள் எல்லோருந் தானழுது
இப்போது நாழிகையும் இல்லைமணி நேரமதும்
உம்முடைய தர்மம் உண்டானா லெங்களையும்
தம்முடைய கருணை உண்டாற் பிழைப்போங்காண்
என்று பேயுரைக்க எம்பெருமா ளேதுரைப்பார்
அன்று நானுரைத்து ஐமூன்று மாதம்வரை
பார்த்து இருந்தேன் பசாசுகளே யுங்களுக்காய்க்
காத்து இருந்தேனே ஆண்டொன்றொரு கால்வரையும்
என்பேரில் குற்றமில்லை என்று சாட்சிவைத்து
உன்பேரில் குற்றமதால் ஒடுக்கிறே னுங்களையும்
என்று பேயோடு இப்போவரம் வையுமென்றார்
அன்றுபே யெல்லாம் அறமெலிந்து தான்வாடி
என்னமுறை சொல்லி இப்போவரம் வைக்கவென்று
வன்னப் பொருளே வகையாகச் சொல்லுமென்றார்
அந்தப் பொழுதில் அய்யாநா ராயணரும்
இந்தப் பொழுதில் இம்மணியிந் நேரமதில்
ஐயாவு மங்கே ஆகமத்தைத் தான்பார்த்து
கைவாய்த்து தென்று கழிவோ டுரைபகர்வார்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi