அகிலத்திரட்டு அம்மானை 3541 - 3570 of 16200 அடிகள்
தந்தருளுங் கோவே சர்வ தயாபரனே
இனியெனக்கு ஏற்ற இயல்வரங்க ளானதெல்லாம்
கனியிதழும் வாயானே கையில்தர வேணுமென்றான்
கலியன் கேட்ட வரங்கள்
அப்படியே ஈசர் அவனை முகம்நோக்கி
இப்படியே உன்றனக்கு ஏதுவரம் வேணுமென்றார்
என்ற பொழுது இயல்புகெட்ட மாநீசன்
தெண்டனிட்டு ஈசர் திருவடியைத் தான்பூண்டு
கேட்பான் வரங்கள் கீழுமேலும் நடுங்க
வீழ்ப்பாரங் கெட்ட விசைகெட்ட மாநீசன்
மாயவனார் தன்னுடைய வாய்த்த முடிதனையும்
தூயவனார் சக்கரமும் சூதமுடன் தாருமென்றான்
அரனுடைய வெண்ணீறும் அந்தணரின் தன்பிறப்பும்
வரமுடைய சத்தி வலக்கூறுந் தாருமென்றான்
சிவமூலஞ் சத்தித் திருமூல மானதுவும்
தவமூலம் வேதாவின் தன்னுடைய மூலமதும்
மாலுடைய மூலம் வாய்த்தலட்ச மிமூலம்
மேலுடைய தெய்வ விதமூலமுந் தாரும்
காலனின் மூலம் காமாட்சி தன்மூலம்
வாலைச் சரசோதி மாகாளி தன்மூலம்
கணபதி யின்மூலம் கிங்கிலியர் மூலம்
துணையதிப னான சுப்பிரமணியர் மூலமதும்
ஆயிரத் தெட்டு அண்டம்நிறை மூலமெல்லாம்
வாயிதக் கண்ணே வரமாகத் தாருமென்றான்
அல்லாமற் பின்னும் அந்நீசன் கேட்டவரம்
பொல்லாத வித்தை புகலக்கே ளொண்ணுதலே
கூடுவிட்டுக் கூடு குதிக்கக் கருவதுவும்
நாடு பாழாக்கி நகரிகொள்ளை யாக்கிடவும்
துயில்வோர் போலுலகம் துஞ்சவைத்துக் கொள்ளைகொண்டு
அயதிமோ கினிக்கருவும் அரனேநீர் தாருமென்றான்
ஆவடக்கு மோகினியும் அழைக்கவெகு மோகினியும்
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 3541 - 3570 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi