அகிலத்திரட்டு அம்மானை 12031 - 12060 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 12031 - 12060 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அப்போ தரசன் எல்லோரு மேகேட்க
இப்போ திவனினத்தில் எத்தனைபேர்க் கானாலும்
ஒப்போ டுறவாய் ஒத்திருந்து வாழ்வதல்லால்
சற்பம்போ லொத்த சகலசா திதனக்கும்
உத்தரவு சொல்லாமல் உபாயமாய்த் தானிருந்து
மற்றுமொரு சாதிகளை வாவென்று ரையாமல்
தன்னொரு சாதி தன்னோ டிருப்பதல்லால்
பின்னொரு சாதி பிதனம்வைத்தப் பாராமல்
இனத்துடனே சேர்ந்து இருப்போம் நாமென்றுசொல்லிக்
கனத்தோ டவனும் கைச்சீட் டெழுதிவைத்துப்
பின்னவன் எல்லையிலே போகச்சொல் லென்றுரைத்தான்
மன்னன் கலியுரைத்த வாக்கின் படியெழுதி
ஒப்பமிடச் சொன்னார் உலகளிந்த பெம்மானை
செப்பமுடன் நாரணரும் சிரித்து மனமகிழ்ந்து
நம்மாலே சொல்லி நகட்டப் படாதெனவே
சும்மா அவன்வாயால் சொல்லிச் சுமைசுமந்தான்
இதல்லோ நல்ல இயல்கா ரியமெனவே
அதல்லோ வென்று அரிமா லகமகிழ்ந்து
கைச்சீட்டை சுவாமி கைகொண்டு தான்கீறி
வச்சுக்கோ வென்று மண்ணில் மிகப்போட்டார்
கீறிவிட்ட ஓலைதனைக் கெடுநீசன் தானெடுத்து
மாறிக் கொருத்து வைத்தான்கா ணம்மானை
உன்னில் லிடத்தில் உடனேநீ போவெனவே
குன்னுடைய நீசன் கூறினா னம்மானை
அப்போது மாயவனார் அகட்டென வுறுக்கி
இப்போது நீநினைத்த இலக்கதிலே போவேனோ
தேவ னினைத்தத் தேதியுண் டவ்வேளைப்
போவே னெனச்சொல்லிப் பெரியோ னகமகிழ்ந்து
நல்லவரே மக்காள் நாம்நினைத்தத் தேதியது
வல்லவரே வருகு மாசிபத் தொன்பதிலே

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi