அகிலத்திரட்டு அம்மானை 12061 - 12090 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 12061 - 12090 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

கிழக்குநாம் போவோம் கிரணமாய் நீங்களெல்லாம்
விளக்கொளி போலே வீரம தாயிருங்கோ
என்றுரைக்க நாதன் இசைந்தமக்க ளெல்லோரும்
நன்று நன்றென்று நாதன் பதந்தொழுது
தொழுது அவரிருக்கத் தூயத் திருமாலும்
முழுது மனந்த மூதூரை விட்டுஇன்று
பழுதில்லாத் தெச்சணத்தில் பரமனமக் கேயருளித்
தந்தயச் சிருந்த தாமரையூர் நற்பதியில்
சிந்தை மகிழ்நாதன் சீக்கிரம் போகவென
நினைத்துத் திருமால் நிண்ணயமாய் உள்ளடக்கிக்
கனத்த புகழ்சான்றோர் கைக்குள்ளே நிற்பவரைப்
பய்யவே யின்று பயண மெனவுரைக்க
உய்யமிகக் கொண்டோர் உல்லாச மேயடைந்து
சந்தோசங் கொண்டு சங்கடங்கள் தீர்ந்துதென்று
வந்தோர்க ளெல்லாம் மாயவரைத் தொட்டில்வைத்து
ஏந்தி யெடுத்து இயல்வா கனம்போலே
ஓர்ந்து வருக உற்ற அனந்தம்விட்டுக்
கண்டுநீ சப்பாவிக் கர்த்தாவைத் தானிகழ்ப்பாய்க்
கொண்டுபோஞ் சாணாரைக் கூடிமிகச் சிரிப்பார்
சாமியென்றோன் பட்ட சளங்களெல்லாம் பார்த்திருந்தும்
வாய்மதத்தால் பின்னும் வழுங்கல் சுமப்பதுபார்
ஆலனைச் சுமந்தாலும் அதிகபலன் உண்டாகும்
பிழைப்பில்லை யென்றோ புத்திகெட்டச் சாணார்கள்
உழைக்க மதியற்று உளத்துகிறான் சுமந்து
பேயனைச் சுமந்து புலம்பித் திரிவதற்கு
நாயன் முன்னாளில் நாட்டில் படைத்ததுபார்
என்று தூசணிப்பார் இசைந்தபுகழ்ச் சான்றோரை
அன்றதிலே சிலபேர் அல்லகா ணென்றுசொல்லி
நம்மளுக் கென்ன நட்டம்வந்து போச்சுதெனச்
சும்மா அவனினத்தோர் சுமந்துகொண்டு போவதல்லால்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi