அகிலத்திரட்டு அம்மானை 11701 - 11730 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 11701 - 11730 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

கண்டு பிடித்துக் கட்டுவார் நம்மையுமே
தொண்டுசெய்யுஞ் சான்றோர் துயரமது மாறாது
நாம்நினைத்தக் காரியமும் நடந்திடா தானதினால்
ஏனிதைத்தான் சொல்லப் போறோ மெனஅடக்கி
எல்லாம் படைத்த ஏகன் கிருபையென
அல்லா நினைத்தபடி ஆகு மெனவுரைத்தார்
அப்போது நீசன் அவன்வெகுளி யாயுரைப்பான்
இப்போ தொருமருட்டாய் இவன்சமைந்தான் சுவாமியென்று
மருளிதுதா னென்று மாநீசன் தான்மருண்டு
கொண்டுபோங் கோசறடன் கூண்டவன் முன்பதிலே
என்றுரைத்த போது ஏவல்சீவா யிகளும்
நடத்தி யிழுத்து நாரா யணரையுமோ
கடத்திச் சறடன் கண்டிருக்கக் கொண்டுவிட்டார்
உடனே சறடன் உபாயமதைப் பார்ப்போமென்று
தடதடென எழுந்து சாராய மானதிலே
அஞ்சுவகை நஞ்சு அதில்கலந்தான் மாபாவி
நஞ்சில்லை யென்று நல்லபா லென்றீந்தான்
பாலென்ற போது பச்சைநா தன்மகிழ்ந்து
காலனைக்கா லாலுதைத்தக் கடவுளார் தாமகிழ்ந்து
வேண்டி யகமேற்றார் வேதநா ராயணரும்
ஆண்டி யதனால் அஞ்சா திருப்பதையும்
பார்த்துச் சறடன் பண்நா யகமகிழ்ந்து
வேற்றொரு சூட்சம் வேறேயுண் டாகுமென
என்னமோ என்று இவனுணர்ந்துப் பாராமல்
பொன்னர் மயக்கம் பெரிய மயக்கமதால்
கொடுபோங் கோவென்று கூறினான் சேவகநாடு
வெடுவாகக் கொண்டு வெறுநீசன் டாணாவில்
அடைத்துவைத் தானங்கே அன்னீத மாபாவி
திடத்தமுடன் நாரணரும் சிந்தைமிக மகிழ்ந்து
இருந்தா ரேயங்கே ஏழைக்கிரங்கி யவர்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi