அகிலத்திரட்டு அம்மானை 11731 - 11760 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 11731 - 11760 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

தருந்தார ருக்காகத் தடியிரும்பி லுமிருந்தார்
சான்றோருக்காகத் தடியிரும்பிலுமிருந்து
மாண்டோ ரையுமெழுப்பும் மாய வலுவாண்டி
அய்யோ அவரை அடைத்துவைத் தேயிருந்த
பொய்யோ புரைக்குள் பொறுக்குமோ கண்ணுகண்டால்
மோளுக் குழியும் மொய்த்தத்தெள் ளினங்களுமாய்த்
தோளு வழியே சொரியுதே தெள்ளினங்கள்

அய்யாவை அனந்தபுரம் கொண்டு செல்லல்

அட்டை மிதக்க அரியத்தேள் ஈமிதிக்க
விட்ட நரகு மிகுவாய்ப் புழுமிதக்க
நாற்றத் துறைகள் நரகத் துறைபோலே
பார்த்த இடமெல்லாம் பலபுழுக்க ளுஞ்சரிய
ஐயோ அய்யாவை அடைத்தப் புரையதிலே
கையாடி நிற்கக் காரணமோ மாயவர்க்கு
சான்றோ ருக்காகத் தர்மக் குருநாதன்
மீன்று முழியாமல் முகமலர்ந் தங்கிருந்தார்
ஏழை களுக்காக ஈரொன்றொரு நாளாய்
மீளாச் சிலுவையிலே முள்ளா லடிகள்பட்டு
மரித்துப் பிறந்ததுபோல் மாயக் குருநாதன்
இதுவுகத்துக் கிப்புரையில் இருந்து அழுந்தவென்று
இருந்தாரே மாயவனார் ஏழைகளுக் காயிரங்கிக்
கருந்தார மார்பன் கருத்தில் மிக அடக்கி
எல்லா மடக்கி இவரிருக்கும் நாளையிலே
பொல்லாக் கலியன் புறப்பட்டான் மேற்கெனவே
இப்பே யனையும் இங்கேகொடு வாருமென்று
அப்போது சொல்லி அவனடந்தான் மேற்கெனவே
உடனே சிவாயி உற்றநா ராயணரைத்
திடமாகக் கூட்டிச் சிணமே நடக்கலுற்றான்
கொண்டு போனாரே கோட்டாற்று ஊரோடே
கண்டுபெரும் பாவியெல்லாம் கட்டிகொண்டு தானெறிய
எறிவார் சிலபேர் ஏசுவா ரேசிலபேர்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi