அகிலத்திரட்டு அம்மானை 11671 - 11700 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 11671 - 11700 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

இவன்தா னடியோ என்னையுமே ஆடவைத்துச்
சவந்தனையே சுட்டதுபோல் தான்சுட்டப் பேயனிவன்
தலைமயிரைப் பனையில் தான்பங்கு வைத்திறுக்கிக்
குலையக் குலையக் கொன்னகொடும் பாவியிவன்
என்று எறிவாள் இவள்சிலர்க ளம்மானை
அன்றுதுகள் கண்டு அதிலுஞ் சிலமடவார்
ஆமடியோவுங்களையும் அழைத்தானோ வீட்டில்வந்து
ஓமடியோ இந்த இறுமாப்புப் பேசாதுங்கோ
அன்றைக் கவனை அடிபணிந்து நின்றுகொண்டு
இன்றைக் கவனை எறியத் தொடர்ந்தாயோ
என்று சிலபேர் எறியாதே யென்றுரைப்பார்
நன்று நன்றென்று நாரணரு முள்ளடக்கி
ஒருதிக் கொருதி உரைத்திடுகோவெனவே
கருதிமுகம் பாராமல் கண்ணர் மிகநடந்தார்
பாவிக் குலங்கள் பச்சைமால் நாரணரை
தாவிச் சுசீந்திரத் தலம்நோக்கிக் கொண்டுசென்றார்

சுசீந்திரத்தில் அய்யா

கொண்டுபோ கும்வேளை கொடும்பாவி நெட்டூரன்
விண்டுரைக்கக் கூடாத வேதனைகள் செய்யலுற்றான்
அய்யய்யோ மாயவரை அன்னீத மாபாவி
செய்த வினையெல்லாம் சொல்ல முடியாதே
கொண்டுவிட்டு மாயவரைக் கூண்டகலி ராசன்முன்னே
கண்டு கலிராசன் கருத்தில் மிகத்தேர்ந்து
பார்ப்போம் பரிட்சை பயித்தியக்கா ரனுடனே
தாற்பரிய மாகத் தன்விரலின் மோதிரத்தைக்
கழற்றி யொருவர் காணாமல் கையடக்கிச்
சழத்தி வருவது தானறியா நீசன்வன்
ஏதடா என்றன் கைக்குள் ளிருப்பதையும்
ஓதடா வுன்றன் உற்ற வலுவாலே
அப்போது மாயன் அடக்க மிக அறிந்து
இப்போ துரைத்தால் இந்தநீ சக்குலங்கள்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi