அகிலத்திரட்டு அம்மானை 10921 - 10950 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 10921 - 10950 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

விரட்டத் தொடுத்ததுகாண் மிருக மிகக்கூடி
அதட்டுப் பொறுக்காமல் அந்த மலையரசர்
ஓமந் தனைவளர்த்து ஒருகோடி பூச்சொரிந்து
ஆமா அரியெனவே அட்சரங்கள் தானெழுதி
புவனைவலிச் சக்கரங்கள் பீட மதில்நிறுத்தி
நமனை யழைக்கும் நல்லவலுச் சக்கரமும்
சத்தி நிறுத்தி சதாகோடிப் பீடமிட்டு
சுற்றிவர வோமம் சுழலக் கனலெழுப்பி
வேண்டும் படைப்பு விதம்விதமாய்த் தான்படைத்துக்
கூண்டு மலையரசன் குறளிகளைத் தான்வருத்தச்
சேவித்தான் மூன்று நாளாக மந்திரங்கள்
கோபித்துப் பார்த்தான் குறளிகள் தன்பேரில்
சற்றும் பலிக்காமல் சடைத்துமந்தி ரத்தோனும்
கற்றத் தொழிலும் கருவுங் கலைகலைந்து
என்ன விதமோ என்று மிகக்குளறி
மன்னன் மலையரசன் மார்கள் மிகநடுங்கி
எங்கே யினிப்போவோம் என்று மனம்பதறி
சங்கை யழிந்து சருவில் மிகஇறங்கி
தட்டழிந்து வாடி தவித்துநின் றேதுரைப்பார்
பட்டபா டேதெனவே பண்பாகக் கேட்பதற்குக்

குறத்தி வருதல்

குறத்தியொன்று காண்கிலமே குறிகேட்டுப் பார்ப்பதற்கு
உரைத்து அவரிருக்க உடையவ னாரருளால்
குறத்தி யொருத்தி குறப்பெட்டி யுமிடுக்கி
விறைத்துரைத்து வந்தாள் விசாரமிடு வோர்கள்முன்னே
கண்டார் குறத்தியையும் கலிதீர்ந்தோ மென்றுசொல்லி
வண்டாடுஞ் சோலை வனத்தில்வா என்றழைத்து
அருகி லிருத்தி அவளைமிக ஆதரித்துச்
சரிவிலுள்ள மாங்கனிதேன் தகையாற வேகொடுத்து
பசிதீர்ந்து குறத்தி பகர்வா ளொருவசனம்
விசியா யெனதுடைய பசிவிசா ரந்தீர்த்தீர்.

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi