அகிலத்திரட்டு அம்மானை 10651 - 10680 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 10651 - 10680 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

என்று நருட்களறியும்படி உபதேசித்துக் கொண்டிருந்தார்
அதை  உலகோர் அறிந்தும் கேட்டும் முன்னுள்ள ஆகமமுஞ்சரி,
இவர் சொல்கிறதுஞ் சரியென்று ஒத்துக்கொண்டு
இவர்தான் வைகுண்ட சுவாமி யென்று கேட்டறிந்து,
இவர் தலத்திலே போவோமென்று வந்தார்கள்
பின்னும் நாராயண வைகுண்ட சுவாமிதானே,
பேய் பல சீவசெந்து ஊர்வனம்
புற்பூண்டு கற்காவே ரியறிய உபதேசித்தார்
எப்படி யென்றால், வல்லாத்தான் வைகுண்டம் பிறந்து
காணிக்கை கைக்கூலி காவடி
ஆடுகிடாய் கோழி பன்றி இரத்தவெறி தீபதூபம்
இலைப்பட்டை இது முதலானதென்றனக்கு வேண்டாம்
அவசியமில்லையென்று, தர்மம் நித்திச்சு நாடு குற்றங்கேட்க
நாராயணம் சிறையிருக்கும்போது, இனி ஆரேக்கார் என்று பார்க்க,
அதையறிந்து  நீங்களும்  ஒதுங்கியிருங்கோ வென்று உபதேசித்தார்,
உடனதுகளெல்லாம் அய்யாவாணை  நாங்களொன்றும்
ஏற்கமாட்டோமென்று சொல்லிப் போனார்
உடனே நாராயண வைகுண்ட  சுவாமி தானே 
ஓராண்டு ஒன்னரையாண்டு கழித்து உகஞ்சோதித்து வரும்போது,
பேய்  செய்கிற  அன்னீதம் பொறுக்காமல்
மானிடர் வைகுண்ட சுவாமியிடம் வந்து ஆவலாதி வைத்தார்
உடனே வைகுண்டராசரும் திட்டிச்சுப் பார்க்கும் போது
பேய்  செய்கிறது அன்னீதந்தான் என்றறிந்து
பேய்களுக்குள்ள முன்னாகமக் கணக்கைச் சோதித்துப் 
பேயை எரிக்கவேணு மென்று
நாராயண வைகுண்ட சுவாமி தானே மனதிலுத்தரித்தார்

பேய்களை எரித்தல்

விருத்தம்

பேய்கள்தான் பிறந்த வாறும் பெருவரம் பெற்ற நாளும்
மாய்கையால் உலகில் பேய்கள் வந்ததோர் நாளும் பார்த்து
ஞாயமாய் நடுவுங் கேட்டு நாமதை யெரிக்க வென்றே
ஆயர்முன் னெழுத்துங் கொண்டு அருள்முனி வரவே யென்றார்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi