அகிலத்திரட்டு அம்மானை 10381 - 10410 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 10381 - 10410 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வாதை கோதை பயங்களையும் பிறவி
நாசமும் பொய்வினை சஞ்சாரமும்,
பீடை கோடை வாடை  தீர்க்கவும்,
பிள்ளையில்லாத பேர்க்குப் பிள்ளை கொடுக்கவும், 
கண்ணில்லாதபேர்க்குக் கண் கொடுக்கவும்,
தனமில்லாத பேர்க்குத் தனங்கொடுக்கவும்,
சாம்பசதாசிவ சாமி  மூவரும்
சற்குணமாகியே தன்னாலொரு வேசமாகிச் சமைந்து,
சாதி உயர்கொண்ட சத்திமாதர் வழியிலே
சகலகுண நாராயண தீரசம்பன்னர் சாதி
வைகுண்டமாய்ப்  பிறந்திருக்கிறார்,
இனி நன்றாய்த் தெரியுமே.
ஆனதினால் பூமியிலே அடிபிடி அநியாயம்
இறை தெண்டம் கைக்கூலி அவகடம் பொய்ப்புரட்டு
அவர் செவியில் கேட்க வொண்ணாதென்றும்,
மகாகோடி தர்ம பாக்கியசாலியாய்ப் பூமியிலே
அதிகப் பாசமாய் விரித்து அவரருகிற் சூழ
அலங்கார தர்மமணியாய் நிறுத்தி அந்தரவீடு
லாடந்திறந்து அதன்வழி அரனடனம் திருநடனம்
ஆடல்பாடல் அங்ஙனே கண்ணோக்கி சகலதும்
பார்த்தாராய்ந்து இருப்பதால் அவரவர் நினைவிலிருக்கிற
தெல்லாம் அவருக்குத் தெரியாம லிருக்கிறதல்லவே
அதுகண்டு பதறி ஆரானாலும் அவரிட்டிருக்கிற
சட்டம்போல் நடந்து கொள்வாராகவும்.
அங்ஙனே நடக்கிலென்னு வருகில் அவர்
நிச்சித்திருக்கிற தேதியில் நடக்கும் படியேவரும்
அன்பாகிய மனுக்களுக்கு அனுகூலம்
1008 ஆமாண்டு மாசியில் தெச்சணம்
பள்ளிகொண்ட அய்யா நாராயண அய்யா வைகுண்டமாய்
தர்மம் நித்திச்சு எழுதின அறிவென்று

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi