அகிலத்திரட்டு அம்மானை 9541 - 9570 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 9541 - 9570 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

இன்னங்கலி நீசக்குலம் கொல்ல வரம்பெற்றாய்
ஏழைக்குடி சாதிகட்கு மீள விடைகொடுத்தாய்
எழுந்துதெட்ச ணாபுவியில் இரங்கி வரவேணும்
மாளக்கலி தாழநரகம் வீழ வரம்பெற்றாய்
வாய்த்தகுல சான்றோரவர்க் கேற்ற வரம்பெற்றாய்
வரவேணுந் தெட்சணாபுரி மலைபோ லுயர்ந்துபோகு
தேசக்கலி தீதுவநி யாயம் பொறுக்கரிதே
சிவனேவைந்த ராசேதெச்ச ணாபு வியில்போவோம்
கேட்பாரில்லை யெனவேபேய்கள் கீழும் மேலுஞ்சாடுது
கிருஷ்ணாமகா விஷ்ணுவேவுன் கிருபை யிரங்கவேணும்
தாண்மைக்குலச் சான்றோருன்னைத் தவத்தால் தேடிவருந்துன்
தாயுமவர் தகப்பன்சுவாமி தானே யல்லாலுண்டோ
சர்வபரா சுவாமிசிவ சுவாமி யுமக்கபயம்
சாணார்படுந் துயரங்கண்டு சுவாமி யெழுந்தருள்வாய்
ஆற்றிலலைக்கோரை யைப்போல் அலைவதுந் தெரியாதோ
அரியேசிவகெதியேயென அபயமிடுகுதய்யா
அணைப்பாருன்றன் துணையேயல்லால் அவர்க்கே ஏதுமுண்டோ
பலநாளவர் படும்பாட்டெல்லாம் பார்த்தே யிருந்தாயோ
பயமோ அவரிடம் போகினுஞ் செயமோ சொல்லுமையா
பாலரவ ருமக்கேயல்லா பாரா திருப்பாயோ
ஆருமற்றார் போலேயவர் அலைவ துந்தெரியாதோ
அரனேசிவ மருகாவுனக் கபயம் உனக்கபயம்
அவரால்நாங்கள் படும்பாடெல்லாம் அறியல் லையோசுவாமி
ஆதிமுறை யாகமத்தை அழித்துச் சொல்லுறோமோ
அதுதான்பொய்யோ மெய்யோவென் றாகமந் தனைப்பாரும்
அண்டரண்டந் தொழவேவரும் ஆதி யுமக்கபயம்
அரகராசிவ அரனேசிவ அரசே யுமக்கபயம்
ஆதிசிவ னாதிதவ மோதி யுமக்கபயம்
ஐயுங்கிலி சவ்வுங்கிண அரனே யுமக்கபயம்
அம்மாஆதி அய்யாசிவ மெய்யா உமக்கபயம்

விளக்கவுரை :  
 

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi