அகிலத்திரட்டு அம்மானை 10711 - 10740 of 16200 அடிகள்
இகபரன் முதலா யிங்கே இருமெனச் சொல்லி வைத்துப்
பகைசெய்த கழிவை யெல்லாம் எரிக்கவே பரனங்குற்றார்
நடை
ஈசர்முதல் வானோர் எல்லோரும் போகரிது
வாச மலரோனும் மற்றோரும் போகரிது
என்று இவர்களையும் இவர்சூ ழருகிருத்தி
அன்றுபேய் கொண்டுவர அவர்நினைத்தா ரம்மானை
உடனே யுலகமதில் ஊர்ந்துதிரி யும்பேய்கள்
திடமே குளறி சிந்தை மிகக்கலங்கி
பேய்க ளொருதலத்தில் பிரமாண மாய்க்கூடி
மாய்கைத் தொழில்குளறி மனது மிகஅளறிச்
சீல முடனுரைத்த சிவவைந்த ராசர்மொழி
ஏலமேநாம் கேட்டு இருந்திலமே எல்லோரும்
என்னவோ வென்று எண்ணி நினைத்ததெல்லாம்
சன்னைபோ லாகாமல் சாக விதியாச்சே
அய்யோ கெடுத்தோம் அவர்பேரில் குற்றமில்லை
பொய்யென் றிருந்தோமே பெரியோ ருரைத்ததெல்லாம்
நம்பேரில் குற்றமல்லால் நாரணர்மேல் குற்றமில்லை
தம்பேரில் குற்றமல்லாமல் சாமிமேல் குற்றமில்லை
நமக்கு முன்னாளில் நாரத மாமுனிவர்
எமக்குயாமி யங்கொடுத்து அதிகவரம் வேண்டித்தந்தார்
அவரிடத்தில் நாமள் எல்லோரும் போயுரைத்தால்
சிவனிடத்தில் வந்து செய்திகேட் டேயுரைப்பார்
போவோம் வாருங்கோ பேய்க ளொருப்போலே
கோவேங் கிரிதனிலே குடியிருக்கும் மாமுனிவர்
அண்டை யவரணுகி அபயம் முறையமென்றார்
கண்டந்த மாமுனிவர் கழிவையெல் லாமமர்த்தி
அபயமிட்ட தேது அலகைகளே சொல்லுமென்றார்
கௌவை துயரமுற்ற கழிவெல்லாஞ் சொல்லலுற்று
மனுவுருப்போல் வையகத்தில் வைகுண்டம் வந்திருந்து
இனியுங்க ளையெல்லாம் எரிப்போ மிப்போதெனவே
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 10711 - 10740 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi