அகிலத்திரட்டு அம்மானை 9481 - 9510 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 9481 - 9510 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

கடல்திரைவாய்ப் பதிகள் கண்டுசென்று தானிருநீ
தண்ணீர் மண்ணீந்து தானிருபோ என்மகனே
கண்ணி லுருக்காணும் கைக்குளொரு கிள்ளைவரும்
பகைவன் மடிவன் பைங்கிள்ளை யங்காகும்
உகவன் வருவன் ஒருவ னறிவான்காண்
பகவான் சுழற்றும் பாருலக மும்பழுக்கும்
அகங்காணும் பாந்தள் அஞ்சாட்சரங் காணும்
மூசிர சீர்சிரசு முகாசிரசு முன்காணும்
பார்சிரசு கண்டு வாறேனென் பாலகனே
தகையாதே முன்னடநீ சந்தமுனி தன்கூட
பகையாதே என்மகனே பஞ்சவரைக் காத்துக்கொள்ளு
அஞ்சுபூக் கொண்டு ஆசாரஞ் செய்தோர்க்கு
வஞ்சக மில்லாத வாழ்வுகொடு என்மகனே
மகனே நீவாற வழியின் பவிசுகண்டு
தவமுடித்து நீயும் தாண்டியிரு என்மகனே
என்றுவை குண்டருடன் இசைந்தமுனி ரண்டுவிட்டு
கொண்டயச்சுக் காத்திருங்கோ குண்டருட பக்கமதில்
சாட்சியாய்ப் பார்த்திருங்கோ தரணி வளப்பமெல்லாம்
காட்சி கொடுத்திடுங்கோ கண்ணரியோன் முன்னிருந்து
கோபங்காட் டாதேயுங்கோ குணமுனிவ ரேகேளும்
சாபங் கொடாதேயுங்கோ சாஸ்திர முனிவர்களே
நாரா யணர்பெலங்கள் நன்றா யறிவீர்களே
சீரான பொறுதி செய்வதுநீர் கண்டிருங்கோ
வைகுண்ட மாமுனிதான் வாழுந் தலத்தருகே
மெய்குண்டமாய் மேற்கு மேன்மூலை யோர்தனுக்கு
வடகீழ் மூலை மாமுனியே ஓர்தனுக்கு
இடமிதுவே சொன்னேன் யார்க்குந்தெரி யாதிருங்கோ
இந்தப் படிகாத்து இருங்கோ தருணம்வரை
சிந்த முனிவர்களே செல்லு மிவர்கூட
என்று முனிகளுக்கு இயம்பச் சிவநாதன்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi