அகிலத்திரட்டு அம்மானை 9421 - 9450 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 9421 - 9450 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

காக்காமகா தர்ம கற்பையுங் காக்கவே
கர்த்தனரி கிருஷ்ணர் புத்திர ராய்வரும்
தாக்கத் திறம்வளர் வைகுண்ட ராசரே
தர்மமதி லுறையும் பொறுமைக் குலதீரா
பள்ளியுணராய்சிவமருகா
தம்பில மானகு றோணிகுண் டோமனைத்
தத்தியாத் தில்லைமல் லாலனைச் சூரனை
வம்பு இரணிய ராவண சூரனை
மகோதர னானது ரியோதனப் பாவியைக்
கொம்பிலுங் கெம்பிலும் அம்பினாற் கொன்றதோர்
கோபால கிருஷ்ண குழந்தைவை குண்டரே
நம்பின அன்பருக் குபகார சாலியே
நாரணா சீமைக் கரிவரி யானவா
பள்ளியுணராய்சிவமருகாநீ

விருத்தம்


பள்ளிதா னுணர்த்தத் தேவர் பரிவுடன் கேட்டு வைந்தர்
தெள்ளிவை குண்ட ராசர் சிந்தையி லன்பு கூர்ந்து
நள்ளிய தேவ ரார்க்கும் நயமுடன் தயவ மீந்து
துள்ளியே தகப்பன் பாதம் தொழுதவர் வணங்கிச் சொல்வார்

நடை

தேவர் துயரமெல்லாம் தீர்ப்போங்கா ணென்றுசொல்லி
மேவலர்கள் போற்றும் விசயவை குண்டராசர்
தகப்ப னுடபதத்தில் சரண மிகப்பணிந்து
உகப்பரனார் நோக்கி உரைக்கிறா ரன்போரே
என்னைஎடுத்து விஞ்சையீந்து தந்தவரே
என்னையீடேற்றி யிரச்சிக்கும்பெம்மானே
மன்னே பிதாவே மாதாவே யென்தாயே
எல்லா விவரமதும் எடுத்துரைத்தீ ரென்றனக்கு
நல்லோரே நானினித்தான் நடக்க விடைதாரும்
பண்டுள்ள ஆகமம்போல் பால்வண்ணர் பெற்றிடும்வை
வைகுண்டர் தெச்சணமே கொள்வார்தான் பள்ளியென
ஆதியா கமப்படியே அனுப்பிவையு மம்புவியில்

விளக்கவுரை :