அகிலத்திரட்டு அம்மானை 8851 - 8880 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 8851 - 8880 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

கண்டிரு என்மகனே கருத்தொன்று தானாட்டி
கொண்டை யமுதுண்டு குவிந்திரு என்மகனே
இப்படியே ஆறாண்டு இருநீ யுகத்தவசாய்
அப்படியே நீயிருந்து ஆறாண் டேகழித்தால்
நினைத்ததெல்லா முனக்கு நிசமாய் முடியுமப்பா
உனைத்தள்ளி வேறே ஒருமூப் புகத்திலில்லை
என்ன நினைத்தாலும் எத்தனைதான் செய்தாலும்
வன்னத் திருமகனே வகையதுதா னென்மகனே
நீசெய்த தெல்லாம் நிரப்புத்தா னென்மகனே
நானீயே யல்லால் நடப்பதுவும் வேறில்லையே
தானீத னான சர்வபரா என்மகனே
ஒக்க வுனது உள்ளம் நினைத்தபடி
மிக்க நடத்தி விரும்பியிரு என்மகனே
எண்ணிறந்த கோடி இயல்பாவஞ் செய்தோர்க்கும்
நண்ணியே மோட்சம் நவிலவென்றா லுன்மனந்தான்
முக்கோடி தர்மம் உவந்தளித்த அன்போரைத்
தக்கோடி நரகமதில் தள்ளவென்றா லுன்மனந்தான்
உனக்கேற்க நின்றவர்க்கு உதவிகொடு என்மகனே
எனக்கேற்க நின்றவரை இரட்சிப்பது முன்மனந்தான்
சிவனும்நீ நாதனும்நீ திருமாலும் நீமகனே
தவமும் வேதனும்நீ சங்கமுத லெங்கும்நீயே
அப்படியே அய்யா அரிநாத னுமுரைக்க
முப்பொருளோர் மெய்க்கும் முதலோன் மகிழ்ந்துரைப்பார்
ஆறு வருசம் அதிகத் தவம்புரிந்தால்
வாறு மேலென்ன வகுப்பீர்கா ணையாவே
அப்போது நாதன் அன்பா யகமகிழ்ந்து
செப்புகிறார் நல்ல திருமகற்கு அன்போரே
அதிகத் தவசு ஆண்டாறு தான்கழித்தால்
இதின்மேல் நடப்பு இயம்பக்கே ளென்மகனே
இம்மூணு தவமும் இயல்பாய் நிறைவேறி

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi